ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம்
Month: September 2019
ஏன் பயிர் சுழற்சி அவசியம்?
அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.
என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே.
புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்
தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ…
தண்ணீரின் முக்கியம் அறிய
புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும்.
உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும்.
நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும்.
சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள்
இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்
ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.