இயற்கை விவசாயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இடுபொருள்களை வெளியிலிருந்து வாங்க முயற்சிக்க வேண்டாம்.
மண் வளமாக இருந்தாலே போதுமானது.
நிறைய தொழு உரம் கொடுங்கள்.
விவசாய கழிவுகளை மண்ணுக்கு கொடுங்கள்.
முடிந்த அளவு ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுங்கள்.
இரண்டு போகம் பயிர் செய்யுங்கள்.
அடுத்து ஏதாவதொரு பசுந்தாள் பயிரிட்டு பூக்கும் நிலை மடக்கி உழுது விடுங்கள்.
இதுவே போதும்.
பயிர் பாதுகாப்பு என்பதும் இயல்பான நடக்கும்.
இலை தழைகளை கோமியத்தில் ஊறவையுங்கள். இது பூச்சி விரட்டியாக பயன்படும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுப்பது மட்டுமே.
தேவையான அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக மண்ணில் உருவாகும்.