காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்

Agriwiki.in- Learn Share Collaborate

காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்

காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக…அரிசி தண்ணீர்

 

அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:

அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது.

அரிசி நீரில் பல ஸ்டார்ச் வைட்டமின்கள், புரோட்டீன்கள் உள்ளன, காய்கறிகள், பூக்கள் மற்றும் போன்சாய்களுக்கு மிகவும் நல்லது.

பலன்கள்:

அதிக பூ பூக்கவும் பெரிதாகவும் உதவுகிறது…

காய்கறிகள் திரட்சியாக காய்க்க உதவுகிறது..

அனைத்து விதமான செடிகளுக்கும் தரலாம்…

அரிசி தண்ணீர் எப்படி செய்வது ?

சாதம் வடித்த கஞ்சி….

5 நிமிடம் சாதம் கொதித்த தண்ணீர் அல்லது வடித்த கஞ்சி பயன்படுத்தி கொள்ளலாம்…

1 லிட்டர் சாதம் வடித்த தண்ணீர்
2 லிட்டர் தண்ணீர்
2 ஸ்பூன் கடுகு தூள் இருந்தால் சேர்த்து கொள்ளலாம்..

பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி கடுகு தூள் 2 ஸ்பூன் சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொண்டு துணி போட்டு மூடி நிழலில் 3 நாட்கள் வைக்கவும்..

பயன்படுத்தும் முறை:

4 நாள் நன்றாக கலந்து கொண்டு செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்.. 1 லிட்டர் வரை ஊற்றி கொள்ளலாம்…

10 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்…

அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:

அதிக விட்டமின், அமிலம், கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது.

காய்கறிகள் நன்றாக திரட்சியாக காய்க்கும்.. அதிக பூ பூக்கும்…

பிரசன்னா திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.