மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :
1வது நாள் : 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் + டிரைக்கோடர் மா விரிடி தரைவழி பாசனத்துடன் தரவும்.
7 வது நாள்: பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளித்து தரலாம்.1 ஏக்கருக்கு 200 லிட்டர் எருக்கு கரைசல் அல்லது 2 லிட் இ. எம் கரைசல் தரைவழி தரவும்.
14 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது இரண்டு லிட்டர் மீன் அமிலம் தரைவழி பாசனத்துடன் தரவும். பத்து லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
21 வது நாள்: பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளித்து தரலாம். 1 ஏக்கருக்கு இரண்டு லிட்டர் இ. எம் கரைசல்/மீன் அமிலம் பாசனம் வழி தரவும்.
25 வது நாள்: மாலையில் பத்து லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிக்கலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும்.
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்