சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது
நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை
