தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது.
தூங்குவாகை தூங்குமூஞ்சி மரம்

Learn Share Collaborate
தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது.
செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம்: பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும். பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம்.
மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும். இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம்.
சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம்.
இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
முருங்கை இலை பயிர்களுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்து
முருங்கை இலையில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது என அறிவோம்.
இதை ஏன் செடிகளுக்கு கொடுத்து நுண்ணூட்டச்சத்துகள் குறைபாட்டை சரி செய்ய கூடாது என எண்ணியவர்கள் முருங்கை இலை சாற்றை இலை வழியாகவும், வேர்கள் வழியாகவும் கொடுத்து இது சிறப்பாக செயல் புரிகிறது என சொல்கிறார்கள்.
“கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்க மாவுப்பபூச்சியை அழிக்கும் அழிக்கிறது…
விவசாயிகளே,
இதை மருந்து அடிக்கும் மெஷினில் ஊற்றி மற்ற பயிர்களின் மீது தெளித்து முயற்சி செய்து பார்க்கலாம்..
நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது.
இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது. விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.