Category: Agriculture News

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்

வேம்பு பூச்சி விரட்டி கரைசல் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு

இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.
வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

Continue reading

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி

தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.

குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.

எங்கள் அப்பா காலத்தில்,

கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும்.

சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.

ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை.

உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.

சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.

அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும்.

கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.

by Saravanan Thiyagarajan from FB

முட்டை அமினோ அமிலம் – Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி

முட்டை அமினோ அமிலம் - Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி

வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்?

வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெயர்.

இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.

Continue reading

How do we grow soil?

How do we grow soil?

I was just asked a straight forward question.
How do we grow soil? or more precisely How to build a Living Soil ?
We start with silt, sand and clay. None of these are soil.
What we need are plants to convert this into soil.

Continue reading

கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்?

கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்

கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்

கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார்.

இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்… அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம்

Continue reading

நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை

குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை

வயது : 110 லிருந்து 150 நாள் வரை.

*சிறப்பம்சங்கள்;*

🌾நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.

🌾ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .

Continue reading