Category: Agriculture News

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா

எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா)
பதில்:  முடிந்தவரை தரக்கூடாது. இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு.

Continue reading

தென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை

தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

இது தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

இரட்டை வரப்பு:

மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளர்ந்த  50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும்.

இதன் பயன்பாடு:

1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும்

2, நீர் சேமிப்பு

3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும்

4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும்

5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும்

6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும்

7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும்

8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும்.

9. உச்சி வெயிலில் மரத்தின் நிழல் விழும் இடம் முழு வட்ட வடிவில் இருக்கும். அதுவே மரத்தின் வாழிடம் ஆகும். ( ஒரு மரத்திற்கு தேவையான இடவசதி) Canopy area.  இந்த இடங்களில் வேர் பரவி மரம் அதிக உற்பத்தி தரும்

Dial basin irrigation technology:

Our Dial basin irrigation technology for coconut
This technology has developed by me at 1998

Uses:

1 Irrigation at feeding zone
2,Water use efficiency
3,Water saving
4, Helps to remove Salinity of water by the aeration of both bunds
5,Root development and root elongation upto canopy area. So it can reach soil nutrient source.
6, Good soil aeration can be maintained by the furrows which has less chance to tightening by walking.
7,We got good soil development in gravel soil, because continuous irrigation on that area will help for good microbial communities development.
8,Soil erosion control will be there.

By
P.Balasubramanian.
CSO, Sakthi Agri Clinic
94422 53021

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை

வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

Continue reading

இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி

இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி

இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது.

மரப்பயிர் சாகுபடி குறித்து
துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Continue reading

பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்

பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள் - Bacillus subtilis பேசிலஸ் சப்டிலிஸ்

வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.  இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம்.

Continue reading

மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்

இலுப்பை மரம்
மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் அழிவின் விளிம்பில் 

 

வெப்ப மண்டல மரமான இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்  இருக்கிறது. இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.
இது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றால் மிகையாகாது. நன்கு வளர்ந்த மரத்தின் ஒரு கன அடி விலை ஆயிரம் ரூபாய்கள்

இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்
இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரத்தின் மருத்துவ குணம்

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. ( மேலும் அறிய)

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ” என்பது பழமொழி.

இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள்

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு , காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

இலுப்பை மரத்தின் வணிக பயன்கள்

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

பணம் காய்க்கும் இலுப்பை மரம்

ஒரு கன அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

சுற்றுசூழல் காக்க இலுப்பை மரம்

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…..

ஒவ்வொருவரும்  அவர் அவர் பங்குக்கு தன் காடுகளில் ஒரு மரமாவது  வளர்க்க பாருங்கள்..

C Raj Pandian

இலுப்பை மரம் பற்றி 

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் – ஒவ்வொரு மாதத்திலும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் பற்றிய விபரங்கள்
சித்திரை:
1. உளுந்து
2. நிலக்கடலை
3. தினை
4 எள்
5.சோளம்
6.நாட்டுக்கம்பு
7.துவரை
8. வெங்காயம்
9. சேனைக்கிழங்கு
வைகாசி :
1. எள்
2. உளுந்து
3. முருங்கை
4. சூரியகாந்தி
5. நிலக்கடலை
6. சாமை
7. ராகி
8. பனிவரகு
9. கருத்தக்கார்
10. ரஸ்தாளி வாழை
11. ஆனைக்கொம்பன் வெண்டை
12. சின்ன வெங்காயம்
13. வெண்டை
14. புதினா
15. சேப்பங்கிழங்கு
16. மஞ்சள்
ஆனி:
1. உளுந்து
2. மஞ்சள்
3. நிலக்கடலை
4. செம்பருத்தி
5. வெண்டை
6. எள்
7. மா
8. சின்ன வெங்காயம்
9. சாமை
10. கொடி பீன்ஸ்
ஆடி:
1. சோளம்
2. ராகி
3. கம்பு
4. துவரை
5. நாட்டுப் பருத்தி
6. வாழை
11. நிலக்கடலை
12. செடிமுருங்கை
13. உளுந்து
14. பாசிப்பயறு
15. சூரியகாந்தி
16. காவளிக் கிழங்கு
17. எலுமிச்சை
18. மிளகாய்
19. குதிரைவாலி
20. வரகு
21. தினை
22. சாமை
23. நேந்திரன் வாழை
24. சேனைக்கிழங்கு
25. பப்பாளி
26. செம்பருத்தி
27. வெண்டை
28. மாப்பிள்ளைச் சம்பா
29. மா
30. மல்லிகை
31. சின்ன வெங்காயம்
32. நாட்டுக்கம்பு
33. நாடன் வாழை
34. கொய்யா
35. கோவைக்காய்
36. வெண்டை
37. கத்திரி
38. தக்காளி
39. முள்ளங்கி
40. பாகல்
41. பீர்க்கன்
42. புடலை
43. கறுப்பு மொச்சை
 ஆவணி:
1. நிலக்கடலை
2. துவரை
3. எலுமிச்சை
4. கொய்யா
5. மா
6. சின்ன வெங்காயம்
புரட்டாசி:
1. பாசிப்பயறு
2. பனங்கிழங்கு
3. உளுந்து
4. எலுமிச்சை
5. கொய்யா
6. கொடுக்காப்புளி
7. நாவல்
8. முல்லைப் பூ
9. சின்ன வெங்காயம்
10. மொச்சை
11. கொண்டைக்கடலை
12. மா
13. புளி
14. வெற்றிலை
15. குண்டு மிளகாய்
16. களாக்காய்
17. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
18. முல்லை
ஐப்பசி:
1. நாட்டுக்கம்பு
2. குதிரைவாலி
3. கேழ்வரகு
4. கறுப்புக்கொள்ளு
5. பனங்கிழங்கு
6. முருங்கை
7. ஓமம்
8. மல்லி
9. குண்டு மிளகாய்
10. நிலக்கடலை
11. எலுமிச்சை
12. ரஸ்தாளி வாழை
13. கொடுக்காப்புளி
14. நாவல்
15. சின்ன வெங்காயம்
16. எள்
17. மா
18. களாக்காய்
19. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
20. முல்லை
கார்த்திகை :
1. எள்
2. தினை
3. கொண்டைக்கடலை
4. செடிமுருங்கை
5. ஓமம்
6. குண்டுமல்லி
7. சூரியகாந்தி
8. எலுமிச்சை
9. நிலக்கடலை
10. மரவள்ளி
11. அறுபதாம் குறுவை
12. கருத்தக்கார்
13. கொள்ளு
14. ரஸ்தாளி வாழை
15. தர்பூசணி
16. நாடன் வாழை
17. பப்பாளி
18. கத்திரி
19. மா
20. பட்டன் ரோஜா
21. சின்ன வெங்காயம்
22. கறுப்புக் கொள்ளு
23. புதினா
24. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
25. கற்பூரவல்லி வாழை
26. முல்லை
மார்கழி :
1. எள்
2. பனிவரகு
3. கத்திரி
4. தென்னை
5. உளுந்து
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
9. கற்பூரவல்லி வாழை
10. முல்லை
தை :
1. தினை
2. செடிமுருங்கை
3. உளுந்து
4. நாட்டுக்கம்பு
5. கொய்யா
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. பாகல்
9. பீர்க்கன்
10. புடலை
11. சேப்பங்கிழங்கு
12. கற்பூரவல்லி வாழை
மாசி:
1. பாசிப்பயறு
2. எள்
3. முலாம்பழம்
4. ரஸ்தாளி வாழை
5. பேயன் வாழை
6. கொய்யா
7. தர்பூசணி
பங்குனி:
1. முலாம்பழம்
ஆண்டுமுழுவதும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் 
1. கீரை
2. செண்டுமல்லி
3. பாகற்காய்
4. வெள்ளரி
5. பப்பாளி
6. தக்காளி
7. உளுந்து
8. வெண்டை
9. கொத்தவரை
10. செடி அவரை
மேலும் படிக்க
பட்டம் பார்த்து பயிர் செய்