Category: Agriculture News

தற்சார்பு விவசாயி-3 தண்ணீர்

“விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?” என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன்
“உன் வயசென்ன?” என்று பெண்களை கேட்பதும், “உன் சம்பளமென்ன” என்று ஆண்களை கேட்பதும், “இந்த வீடு என்ன விலை” என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை.

கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ?

தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகர்த்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம்.

ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது.

Continue reading

நீர் மேலாண்மை என்றால் என்ன

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

நீர் மேலாண்மை என்றால் என்ன? 
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? 
இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். 
இதை ஒரே நாளில் தெளிவாக சொல்லி விட முடியாது. எனவே முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன்.

Continue reading

நீர் மேலாண்மை – மூடாக்கு

நீர் மேலாண்மை - மூடாக்கு

இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது.

Continue reading

எளிய உயிர்வேலி

எளிய உயிர்வேலி
ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம்.

Continue reading

மழைநீரை அவசியம் சேமிக்கவும்

மழைநீரை அவசியம் சேமிக்கவும்

தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.

Continue reading

மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட

நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

Continue reading