Category: Agriculture News

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை

rice-field

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.

Continue reading

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா

நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம்

மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது.

Continue reading

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு

jasmine

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு:

இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது.
மல்லிகை சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம்.
1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம்.
2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம்.
3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது.
4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம்.
5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது.
6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை இயக்குவது நல்லது.
7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும்.
8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
செடி நன்கு வளர்ச்சி அடைய மற்றும் அதிக பூக்கள் பூக்க செடிகள் அதிக வருடம் மகசுல் தருவதற்கு இயற்கை விவசாயம் செய்வோம்..
..ஒவ்வொரு தெளிப்புக்கும் (10நாள் இடைவெளி ).பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM ஜீவமிர்தம், பூச்சி விரட்டி தெளிப்புக்கு பயன்படுத்தவும்
ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM, ஜீவமிர்தம், சூடோமோனாஷ்…. இவையெல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்..
பூச்சி தாக்குதலுக்கு
அக்னி ஆஸ்திரம் or 18இலை மூலிகை பூச்சி விரட்டி,,, 10நாளுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்….
நாள் பட்ட நோய் தாக்குதல், நெமற்றோடு பிரட்சனை, வளர்ச்சி குறைவு, மஞ்சள் தன்மை,பூக்கள் குறைவு….இவையெல்லாம் படிப்படியாக விரைவில் குறைந்து நல்ல மகசூல் ஏற்படும்…..
அனைவருக்கும் நன்றி
திரு கொய்யா ஆறுமுகம் MA இயற்கை விவசாயி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி 9655950696

நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை

பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன

Continue reading

ரோஸ்மெரி சாகுபடி

ரோஸ்மெரி சாகுபடி

வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது . மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7.0 வரை இருக்கலாம் . இது 5.0 க்கும் குறைந்திருந்தால் , எக்டருக்கு 2.5 டன் டோலமைட்டை இடலாம் . பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும் , கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும் . ஜூன் , ஜூலை . செப்டம்பர் , அக்டோபரில் பயிரிடலாம் . பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும் .
நிலம் தயாரித்தல் :
இருமுறை உழ வேண்டும் . கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரம் , ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு , 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 2 டன் மண்புழு உரத்தை வேண்டும் . பிறகு , 30 செ.மீ. உயரம் , 1.5 மீ . அகலத்தில் பாத்திகளை அமைக்க வேண்டும் . நடவின் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம் , 5 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும் . ஒரு எக்டர் நடவுக்கு 50,000 நாற்றுகள் தேவைப்படும் .
நாற்று உற்பத்தி:
செடிகள் பூப்பதற்கு முன் தண்டுகளை வெட்டி , 10-15 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும் . நுனி இலைகள் இருக்க , மற்ற இலைகளை நீக்க வேண்டும் . வேர்விடும் திறனைக் கூட்ட , 10 % சாண மூலிகைக் கரைசலில் 20 நிமிடம் நனைக்க வேண்டும் . பின் நெகிழிப் பைகளில் நட்டு , நிழலில் வைத்து , தினமும் இருமுறை நீரூற்றி வந்தால் , 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும் .
நடவு :
45X45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும் . ஆறு மாதம் கழித்துச் செடியின் மையத்தண்டை வெட்டி விட்டால் , பக்கக் கிளைகள் நன்கு வளரும் . இதை மானாவாரியாகப் பயிரிடலாம் . வறட்சியில் பாசனம் செய்தால் பச்சை இலைகள் அதிகமாகக் கிடைக்கும் .
பின்செய் நேர்த்தி :
நட்டு ஒரு மாதத்தில் களையெடுக்க வேண்டும் . ஆண்டுக்கு 4-5 முறை களையெடுத்தல் அவசியம் . இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லத்தை எக்டருக்கு 5 கிலோ எடுத்து , 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து வேண்டும் . மேலும் , 3% பஞ்சகவ்யக் கரைசலை ஆண்டுக்கு ஐந்து முறை பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் . மேலும் , இக்கரைசலை மண் அணைத்தல் முறையில் மாதம் ஒருமுறை இட வேண்டும் .
5% வேப்பெண்ணெய்க் கரைசல் , 10 % . மண்புழு வடிநீர்க் கரைசல் , 3% தசகவ்யக் கரைசலை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும் . இதற்குப் பூச்சி , பூசண நோய்களை எதிர்க்கும் திறன் இருப்பதால் பயிர்ப் பாதுகாப்பு அவசியமில்லை . ஆண்டுதோறும் ஒரு எக்டரில் இருந்து 12-13 டன் பச்சை இலைகள் கிடைக்கும் .
அறுவடை:
நட்டு 215 நாட்களில் மகசூலுக்கு வரும் . அடுத்து , ஆண்டுக்கு மூன்று முறை , 3 – 4 மாத இடைவெளியில் மகசூலைப் பெறலாம் . ரோஸ்மேரி பூக்கும் போது இலைகளை அறுவடை செய்ய வேண்டும் . 30-35 செ.மீ. நீளத்தில் , இலையுடன் மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும் . மெல்லிய தண்டு எண்ணெய் எடுக்க ஏற்றது . கடினத் தண்டால் எண்ணெய்யின் தரமும் மணமும் பாதிக்கப்படும் .
பதப்படுத்துதல்:
அறுவடை செய்த இலைகளை நன்கு கழுவி நிழலில் உலர்த்த வேண்டும் . நீலகிரிப் பகுதியில் 10-15 நாட்கள் வரை உலர்த்த வேண்டும் . சமவெளியில் சிமெண்ட் தரையில் பரப்பி மின்விசிறி மூலம் உலர்த்தினால் இலைகள் சீராகக் காயும் . இதனால் மூன்று நாட்களில் 10% ஈரமுள்ள தரமான இலைகள் கிடைக்கும் . இவற்றைத் தரமான நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கலாம் . இவ்வகையில் , ஒரு எக்டரில் ஆண்டுக்கு 2.5 டன் உலர் இலைகள் கிடைக்கும் .
முனைவர் தே.கெய்சர் லூர்துசாமி ,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன் , முனைவர் மீ.திலக் , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் , உதகமண்டலம் , நீலகிரி மாவட்டம் .

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு வளர்ப்பு

மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன.

வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்

1 வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.

Continue reading

புளி சாகுபடி

புளி சாகுபடி

டேமரின்டஸ் இன்டிகா என்று தாவரவியலாளர்களால் அறியப் படும் புளியானது லெகுமினே சியே என்ற தாவரக் குடும் பத்தைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும் . ஆப்பிரிக் காவைத் தாயகமாகக்கொண்ட புளியானது உலகம் முழுவது முள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் , வறண்ட பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . ‘ டேமரின்ட் ‘ என்ற ஆங்கிலப் பெயருக்கு ‘ இந்தியப் பேரிச்சை ‘ என்று பொருள் . கிரேக்கர்களும் , எகிப்தியர்களும் நான்காம் நூற்றாண்டிலேயே புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் .
வளரியல்பு ;
வெப்ப மண்டலப் பயிரான புளியானது 20 மீ உயரம் வரை வளரும் மரமாகும் . மரத்தின் பட்டைகள் நீளவாக்கில் பிளவுகளுடன் காணப்படும் . இலைகள் கூட்டிலைகளாகவும் , சிற்றிலைகள் காம்பு இல்லாமலும் காணப்படும் . மலர்கள் கொத்துகளாக மஞ்சள் நிறத்திலும் , இதழ்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் சிவப்புக் கோடுகளுடனும் காணப்படும் . பழங்கள் 3-10 விதைகள் உடைய தாகவும் , சற்று வளைந்தும் இருக்கும் . பழத்தின் சதைப்பகுதியைச் சுற்றி 2-3 கெட்டியான நார்களும் , அவற்றைச் சூழ்ந்து கெட் டியான மேல் ஓடும் காணப்படும் .
பயன்கள் :
1. பதப்படுத்தப்பட்ட புளியானது ரசம் , சாம்பார் , சட்னி , சாஸ் , கேண்டி மற்றும் குளிர்பானங்கள் என அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் பெருமளவில் பயன்படுகின்றது .
2.புளியில் 30 சதவீதம் வரை சதைப்பகுதியும் , 40 சதவீதம் வரை விதையும் , 30 சதவீதம் வரை ஓட்டுப் பகுதியும் ( தோல் ) அடங்கியுள்ளது .
3. சிவப்பு நிறத்தில் இருக்கும் புளிப்புச் சுவையுடைய கொழுந்து இலைகள் பருப்புடன் கலத்து பொரியல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது .
4. உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையவும் , வலி நிவாரணியாகவும் , இலைகளை அவித்து ஒத்தடம் கொடுகின்றனர் .
5. அதிக புளிப்புத் தன்மையுடைய காய்களின் மேல் தோலை சீவி விட்டு அதனை அரைத்து சட்னி , துவையல் மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் .
6. பிஞ்சுகள் பித்தம் , தாகம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது .
7. புளியம்பழம் பாத்திரங்களைத் துலக்கப் பயன்படுத்தப்படுகின்றது .
8. பழத்தின் சதைப்பகுதியில் டார்டாரிக் அமிலம் , சிட்ரிக் அமிலம் , மாலிக் அமிலம் , அசிட்டிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன .
9. தேள்கடி , இரத்தக்கட்டி , கபம் , வாதம் , வயிற்று நோய் , கண்நோய் ஆகியவற்றையும் பழங்கள் குணமாக்குகின்றது .
10. பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் அழகு பெறுவதோடு , சிறுநீரகத்தில் கல் தோன்றுவதையும் தடுத்து நிறுத்துகிறது .
11.உலர்த்திப் பொடி செய்யப்பட்ட பழமானது ஏற்றுமதி செய்யவும் , குளிர்ப்பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது .
12. சதைப்பகுதி பெக்டின் எத்தனால் மற்றும் புரதம் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றது
13. புளியின் விதையினின்று தயாரிக்கப்படும் பசையானது புத்தகம் தைப்பதற்கும் , நூலுக்கு மெருகூட்டுவதற்கும் , சணல் , நார் நெசவிலும் , இரப்பர் பாலை கெட்டிப்படுத்தவும் பயன்படுத்தப் படுகின்றது .
14. விதையின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் , மரத்தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது .
15. விதையில் 20 சதவீதம் புரதம் அடங்கியுள்ளதால் , அது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகின்றது .
16 விதையினின்று எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ் மற்றும் பெயிண்ட்டுகள் தயாரிக்கப் பயன்படுகின்றது .
17. பூவானது கீழ்வாதம் . முடக்குவாதம் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைப் பெற்றிருப்பதால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றது .
18. புளியின் மலர்களில் உள்ள தேன் , தேனீ வளர்ப்பிற்கு முக்கியமான ஒரு ஆதாராமாகும் .
19.புளி மரங்கள் நிழலுக்காகவும் , மண் அரிப்பைத் தடுப்பதற்கும் பெருமளவில்
வளர்க்கப்படுகின்றன .
சத்துப் பொருட்கள் :
பழத்தின் சதைப் பகுதியில் 18.2 சதவீதம் ஈரமும் , 16.5 சதவீதம் புளிப்புத் தன்மையும் , 38.2 சதவீதம் மொத்தச் சர்க்கரை சத்தும் , 2.8 சதவீதம் தாதுச்சத்தும் அடங்கியுள்ளன . விதைகளில் 30 சதவீதம் விதைத் தோல் மற்றும் 70 சதவீதம் விதைப் பருப்பும் அடங்கியுள்ளது . விதைத் தோலில் 30 சதவீதம் வரை டானினும் , நிறமிப் பொருளும் அடங்கியுள்ளது . விதைப் பருப்பில் 8.1 சதவீதம் தண்ணீர் 17 சதவீதம் புரதம் , 7 சதவீதம் கொழுப்பு , 5 , 6 சதவீதம் நார்ச்சத்து , 60 சதவீதம் மாவுச்சத்து மற்றும் 2.8 சதவீதம் தாதுச்சத்துக்களும் அடங்கியுள்ளன .
இரகங்கள்:
பிகேஎம் 1 :
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினின்று வெளியிடப்பட்ட இந்த ரகம் நடவு செய்த மூன்றாவது வருடத்திலேயே காய்க்க ஆரம்பிக்கின்றது . பழங்களி னின்று 39 சதவீதம் சதை கிடைக்கின்றது . மேலும் மரம் ஒன்றிற்கு ஆண்டுதோறும் 263 கிலோ புளியை மகசூலாகக் கொடுக்கின்றது . இது உள்ளூர் ரகங்களைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகமாகும் . ஒரு கொத்தில் 3 முதல் 7 காய்கள் உற்பத்தியாகின்றன .
இதன் சதைப் பகுதியில் 17.1 சதவீதம் டார்டாரிக் அமிலமும் , 3.9 சதவீதம் உயிர்ச்சத்து ‘ சி’யும் அடங்கியுள்ளன .
உரிகம் புளி :
இது தருமபுரி மாவட்டத்திலுள்ள , தேன்கனிக் கோட்டைக்கு அருகில் உள்ள உரிகம் என்ற இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமாகும் . இதன் பழங்கள் தட்டையாகவும் , வளைந்தும் காணப்படும் . ஒவ்வொரு பழங்களிலும் 10 முதல் 12 விதைகள் காணப்படும் . ஒவ்வொரு பழமும் சராசரியாக 180 முதல் 200 கிராம் எடையுடன் இருக்கும் . பழங்கள் மார்ச் மாதத்தில் முதிர ஆரம்பித்து ஜூலையில் அறுவடைக்கு வருகின்றன .
இதைத் தவிர இராஜஸ்தான் உள்ளூர் வெளியிடப்பட்ட மாவட்டத்தினின்றுபுரதிஸ்தான் மற்றும் தமிழக தேர்வுகளான கம்பம் தேர்வு , கொண்டதேவன் பள்ளி தேர்வு , தேவர் ஆனிமங்கலம் தேர்வு ஆகியனவும் ஆங்காங்கு சாகுபடியில் உள்ளன .
வகைப்பாடு:
புளியில் மூன்று வகைகள் காணப்படுகின்றன .
1. புளிப்புச் சுவையுடைய பழங்கள் ( பி . கே.எம் .1 )
2. இனிப்புச் சுவையுடைய பழங்கள் ( தாய்லாந்து தேர்வு )
3. சிவப்பு புளியமரம் ( பெரியகுளம் தேர்வு )
இவற்றில் புளிப்புச் சுவையுடைய பழங்கள் உள்நாட்டுத் தேவைகளுக்கும் , மற்ற இரு வகைகளும் ஏற்றுமதிக்கும் பயன்படுகின்றன . வட இந்தியாவில் இனிப்புப் புளியிலிருந்து ஜாம் , ஜெல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன .
பயிர் பெருக்கம்:
புளி உயர் விளைச்சல் ரகங்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் மூலம் வழிவழியாக இனவிருத்திச் செய்யப்படுகின்றன . ஆனால் ஒட்டு கன்றுகள் விரைவில் காய்ப்புக்கு வருவதாலும் அவை தாய்க் கன்றுகளை ஒத்திருப்பதாலும் தற்போது புளியானது ஒட்டுக் கன்றுகள் மற்றும் மொட்டுக் கட்டுதல் முறைகளில் இனவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன .
மண்:
பல்வேறுபட்ட புறக்கணிக்கப்பட்ட மண் வகைகளிலும் புளி வளரும் தன்மையுடையது . பொதுவாக மணல் கலந்த செம்மண் , வண்டல் மண் , செம்புறை மண் போன்ற நிலங்களில் புளி நன்கு வளரும் . மேலும் வறட்சி மற்றும் அமில காரத் தன்மையுடைய மானாவாரி நிலங்களிலும் கூட புளியை வளர்க்கலாம் .
கால நிலை :
புளி ஒரு வெப்ப மண்டல பயிராகையால் அது எல்லா வகை கால நிலையிலும் சிறப்பாக வளரும் . மழை குறைந்த கோடையில் 36 சென்டிகிரேட் வெப்பநிலை நிலவும் பகுதிகளிலும் புளியைச் சாகுபடி செய்யலாம் . ஆனால் இம்மரம் பனியைத் தாங்கும் தன்மை இல்லாதது . பொதுவாக ஆண்டு மழை அளவு 500 முதல் 1500 செ.மீ அளவுடைய எல்லாப் பகுதிகளிலும் புளியைச் சிறப்பாகச் சாகுபடி செய்யலாம் .
பருவம் :
செப்டம்பர் , அக்டோபர் மாதங்கள் புளி நடவு செய்ய உகந்தவை . பருவ மழைகள் இருந்தால் ஜீன் , ஜூலை மாதத்திலும் புளியை நடவு செய்யலாம் . நிலம் தயாரித்தல் ஒரு மீட்டர் நீளம் , அகலம் , உயரமுடைய குழிகளை 10 x 10 மீ இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் . ஆனால் ஒட்டுக் கன்றுகள் நடவு செய்யும்போது 8 x 8 மீ இடைவெளி போதுமானது . பின்னர் 20 கிலோ எரு , மேல் மண் மற்றும் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பவேண்டும் .
நடவு செய்தல் :
பருவ மழைக் காலங்களில் மழை ஆரம்பித்தவுடன் கன்றுகளை நடவு செய்யவேண்டும் . நடும்போது ஒட்டுப் பகுதி , மண்ணுக்கு மேல் இருக்கும்படியாக நடவு செய்து , துணை கொண்டு கட்டவேண்டும் .
நீர்ப்பாசனம் :
புளியானது மானாவாரியாகச் சாகுபடி செய்யப்படுவதால் பொதுவாக நீர்ப்பாசனம் கொடுக்கப்படுவதில்லை . ஆனால் செடிகள் தளிர் விட்டு வளரும் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் தண்ணீர் விட்டு வளர்ப்பது நல்லது . தற்போதைய ஆய்வின்படி சொட்டு நீர்ப் பாசனம் கொடுப்பதன் மூலம் பயிர் விரைவாக வளர்ந்து மகசூலுக்கு வருவதுடன் , அதிக மகசூலும் கிடைக்கிறது .
உரமிடுதல் :
செடி ஒன்றுக்கு 25 கிலோ எரு மற்றும் 200 : 150 : 260 கிராம் தழை , மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் உயர் மகசூலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள உரங்களை ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் இடவேண்டும் . மேலும் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை மணிச்சத்துடன் கலந்து இடுவதால் செடிகளின் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கின்றது .
பின்செய் நேர்த்தி:
வேர்க்குச்சிகளினின்று தோன்றும் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும் . தோட்டத்தில் காணப்படும் களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . ஊடுபயிராகக் காய்கறிகள் மற்றும் முருங்கை போன்றவற்றை ஆரம்பப் பருவத்தில் பயிர்செய்து அதிகப்படியான வருமானம் ஈட்டலாம் . அறுவடை விதை நாற்றுகள் நட்ட எட்டாவது வருடத்திலும் ஒட்டுக் கன்றுகள் நான்காம் வருடத்திலும் காய்க்க ஆரம்பிக்கின்றன . பொதுவாக மரங்கள் மே , ஜூன் மாதங்களில் பூத்து மார்ச் , ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு வருகின்றன . பூத்த பின் அறுவடைக்கு 10-11 மாதங்கள் ஆகின்றன . பழங்கள் மரக்கிளைகளை உலுக்கியும் , நீண்ட குச்சிகளைக்கொண்டும் அறுவடை செய்யப்படுகின்றன .
மகசூல் :
நன்கு வளர்ந்த மரம் ஆண்டொன்றிற்கு 200 முதல் 300 கிலோ பழங்களை மகசூலாகத் தர வல்லது . ஒரு எக்டரினின்று சராசரியாக 12-16 டன்கள் வரை மகசூல் பெறலாம் .
பயிர் பாதுகாப்பு
புளியில் பெரும்பாலும் பூச்சிகளோ , நோய்களோ தாக்கு வதில்லை .