நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி: பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.
நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி

Learn Share Collaborate
நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி: பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.
பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம்
மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது.
பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன
வெள்ளாடு வளர்ப்பு
மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
1 வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.