கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன.
🐄 மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.
இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும்.