Category: News

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை

எனது பெயர் ரகுபதி.என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31.7.2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில் கலந்து சென்றுவிட்டது.

திரு.பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைப்படி எனது ஒவ்வொரு வயலிலும் ,சரிவின் குறுக்கே அடிப்பகுதியில் Jcb இயந்திரம் மூலம் 30*3*2 அடிகள் கொண்ட குழி எடுத்து தோண்டிய மண்ணை குழியின் கீழ் உள்ள வரப்பின் மேல் போட்டுவிட்டேன்.அனைத்து வயலிலும் அமைத்தேன். 4.5 ஏக்கருக்கு குழி எடுக்க ரூ.24000 செலவானது.இதில் 6000அடி நீளமுள்ள குழி தோண்டப்பட்டது. இந்த ஒரு நாள் மழையில்
இக்குழிகளில் மொத்தமாக சுமார் 9.3 லட்சம் லிட் நீர் சேமிக்கப்பட்டது. இது 60*60*10 அடி அளவுள்ள ஒரு பண்ணைக்குட்டையின் கொள்ளளவாகும்.

ஆரம்பத்தில் இந்த மாதிரி வயலில், மழைநீர்சேகரிப்பில் ஆர்வமின்றியும் இடம் வீணாகிறதே என கவலைப்பட்ட என் அப்பாவிற்கு இக்குழி எடுத்து வரப்பமைக்கும் திட்டத்தால் இரட்டைப் பலன் கிடைத்தது குறித்து பெரு மகிழ்ச்சி.

இம்மாதிரி அமைப்பால் சரிவாக இருக்கும் மலையடிவாரம் முதல் அனைத்து வகை மண் உள்ள அனைத்து தமிழகப் பகுதிகளுக்கும் தென்னை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கிடையேயும் மானாவாரி நிலங்களிலும் அமைக்க ஏற்ற, குறைந்த செலவில் அருமையான திட்டம்.கிணறுகளிலும் போரிலும் நீர் பெருமளவு உயர அருமையான அமைப்பு.

மகிழ்ச்சி.

வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்

வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்.

விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும்.

இந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.

Continue reading

பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

*பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் !!*

விவசாயிகளின் பெரிய பிரச்சனையாக இருப்பது பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல்.

இதனால் மகசூல் குறைந்து, அதிக லாபம் பெற முடியாமல் உள்ளனர்.

எனவே பயிர்களில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி* :

🐛 இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தௌpக்க வேண்டும்.

*இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடீனியா :*

🐛 இதனை தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லியும் சேர்த்து தௌpக்க வேண்டும்.

*நெல் குலை நோய் :*

🍂 வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 300 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

*பாக்டீரியா, பூஞ்சாணம் :*

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தௌpக்கலாம்.

🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தௌpக்கலாம்.

*சாறு உறிஞ்சும் பூச்சி :*

🐛 இந்த பூச்சியினை கட்டுப்படுத்த 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதையை கலந்து பயன்படுத்தலாம்.

🐛 மேலும் 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து பயன்படுத்தலாம்.

*நெல் இலை சுருட்டுப் புழு :*

🐛 300 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தௌpக்க வேண்டும்.

*நெல் தூர் அழுகல், இலை அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

*நிலக்கடலை தூர் அழுகல் நோய் :*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*பயறு வகை சாம்பல் நோய்:*

🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தௌpக்க வேண்டும்.

*தென்னை வாடல் நோய் :*

🍂 இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.