ஆத்தி மரம் இடிதாங்கி மரம்

ஆத்தி மரம் இடி தாங்கி மரம்

ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.

Continue reading

அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு

கருவேல மர பட்டை

குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி
10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Continue reading

Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்

Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்

இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.

Continue reading

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள்

விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை.
அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை.
ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள்.
அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள்.
அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது.

Continue reading

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்: எப்படி?
குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு பகுதியில் பயிரிடப்படுகிறது.

Continue reading

இயற்கை வேளாண்மைக்கு எது தடை?

இயற்கை வேளாண்மைக்கு எது தடை

இயற்கை வேளாண்மைக்கு எது தடை?
இப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.
ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன?

Continue reading

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

*வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது.
எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 – 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது.

Continue reading