கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே.
புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்

தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ…
தண்ணீரின் முக்கியம் அறிய

புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும்.
உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும்.
நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும்.
சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு

பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள்
இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.
ஓர் எருக்கன் செடியின் உலகம்

பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையற்ற செடிகளை வெட்டி வீசுவதும் குப்பையோடு சேர்த்து எரித்து இடத்தை சுத்தம் செய்ததாக கருதி பெருமை கொண்டதும் உண்டு!
பேராசையின் வெளிப்பாடுகள்

“இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்து கொள்ள நெடுங்காலம் எடுத்து கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இவை புதுபிக்க கூடிய வளங்கள் (Renewable Energy) இன்று கூறப்படுபவை. இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும் பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டு செல்லும்