குதிரைவாலி

குதிரைவாலி எப்படி பயிரிடுவது? மானாவாரியாக பயிரிட செப்டம்பர் – அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி – மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

Continue reading

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி

மஞ்சள் நிற ஒட்டுப் பொறி.

பழைய டால்டா டன்கள்ல மஞ்சள் நிறத்தில் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் அல்லது கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உயரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும்.

மஞ்சள் நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவுணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் ஆகிய பூச்சிகள் டப்பா மேல ஒட்டிக்கிட்டு இறந்து போகும்.

விளக்கு பொறி

விளக்கு பொறி
வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும்.

Continue reading

Agri Intex 2017

விவசாய செய்திகள்

👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

👉 விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அக்ரி இன்டெக்ஸ்,
ஜூலை 14 முதல் 17 வரை,
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயமுத்தூர் – 641014
தொலைப்பேசி எண்
75028-22000

83449-22000

முக்கிய அம்சங்கள் :

👉 விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்

🐠 மீன் வளர்ப்பு

🌱 பசுமை விவசாயம் மற்றும் தாவர பாதுகாப்பு

🌾 பயோடெக்னாலஜி

🌳 பசுமை வீடு

🍁 உரங்கள் மற்றும் இரசாயனங்கள்

🍀 மறுசுழற்சி சக்தி

🌷 மலரியல்

🐓 கோழி வளர்ப்பு

💦 பாசன மற்றும் நீர் தொழில்நுட்பம்

🍀 விதைகள் மற்றும் செடி வளர்ப்பு சாதனங்கள்

🐄 கால்நடை மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பம்

🍃 துல்லிய விவசாயம்

🍂 கிராமப்புற வளர்ச்சி

👉 வெளிநாட்டினரின் சிறப்பு அரங்குகள்

👉 ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டு ஒரு புது பொலிவுடன் விவசாய கண்காட்சி உதயமாக உள்ளது.

👉 விவசாயத்தை காக்கவும், விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா…. விரைந்திடுங்கள் ஜூலை 14 அன்று கோவைக்கு…

👉 உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தாங்கி கொள்ள தயாராக உள்ளது கொடிசியா வளாகம்….!!

விவசாய நண்பர்களுக்கு

விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.
இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம்.
மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள்.
1000பேர் கொண்ட குழுக்கள் இப்போது சுருங்கி குறைந்த பட்ச விவசயிகளிஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அரசு சலுகைகளை பெற்று திறம்பட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட வேண்டும்.
கூடி வாழ்ந்தால் கோடி நம்மை.
இனி தனி மனிதர் வெறும் பேச்சால் மட்டுமே இருக்கமுடியும் அன்றி சிறப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு.
தங்கள் போக்கிற்கு ஒத்து செயல்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி தங்கள் ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ விற்பனைசெய்து தங்கள் பொருளுக்கு அதிகபட்ச விலையை தாங்களே நிர்ணயம் செய்து பயனடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
உணவு பொருட்கள் மட்டுமே அன்றி நாம் விவசாய உற்பத்தி பொருட்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுமதிசெய்யவோ, இயந்திரங்கள் கொண்டு மதிப்புகூட்டவோ, மொத்த வியாபாரத்தில் ஈடுபடவோ, உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவோ வழிவகை உண்டு. இதற்கெல்லாம் ஒரே மூலதனம் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை.
இதை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இது சாதாரண செயல் அல்ல.
ஆனால் செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்.
முதலில் ஒத்த கருத்துகள் கொண்ட 10 நபர்கள் ஒன்றிணைந்து குழுக்களை உருவாக்கி, நன்றாக இயங்கக்கூடிய குழுக்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படலாம்.
இதற்கென ஆலோசனை வழங்க தனி நபரை ஆலோசகராக அரசு நியமித்து உள்ளது. அவர்களை கலந்தாலோசித்து தங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வழிவகை செய்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு சலுகைகளை எதிர்பாராமல் 10 நபர்களுடன் உருவாக்கப்பட்ட நமது
பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
இன்று 6 மாத காலத்தில் 30 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள விவசாயிகள் இனி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். சிக்கல்கள் வராதா என்றால் வாடும் என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் பிறந்த நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் பார்த்து தானே வருகிறோம்.
அப்பபை இருக்க வேறு வேறு மன ஓட்டம் கொண்ட நபர்கள் இணையும்போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அவற்றை களைந்து அதில் இருந்து மீண்டு எழுந்து செயல்படும் குழுக்கள் வெற்றி அடையும்.நன்றி.

ஹ்யூமிக் அமிலம்

ஹ்யூமிக் அமிலம்.

ஹ்யூமிக் அமிலங்கள் மட்கிய பொருட்களின் முக்கிய அங்கமாகும், இவை மண்ணின் (மட்கிய), கரி மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளன.

இது பல மேட்டுப்பாதைகள், நீர்த்த நீரூற்றுகள் மற்றும் கடல் நீர் ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளது. இது இறந்த கரிம பொருட்களின் உயிரியலகுப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Humic அமிலம் என்பது மட்கிய மண், தழைக்கூளம், கரி மற்றும் பிற மண் தயாரிப்புகளின் ஒரு இயற்கை கூறு ஆகும். ஹியூமிக் அமிலம் என்பது கரிம பொருட்களின் சிதைவின் போது உருவாக்கப்பட்ட நுண்ணுயிர்களின் ஒரு தயாரிப்பு ஆகும்.

Humic Acid என்ன செய்கிறது?

ஹ்யூமிக் அமிலம் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது, நீண்ட காலத்திற்கு மண்ணின் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது. இது தாவரங்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட அமிலம் உரம் ஒரு பயனுள்ள சேர்க்கை இருக்க முடியும். இது நுண்ணுயிரிகளுக்கு ஒரு உணவு மூலக்கூறு மற்றும் உணவு மூலமாகும். தாவரங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை தக்கவைத்து ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கு உதவும் திறனைப் பெறும்

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால்

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.

Continue reading