நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, “அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே,” என்று என்னை எச்சரித்தார். “ஏன்” என்றேன். “அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்” என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை.
அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று பின்னல் அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும்.
Continue reading →