இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.
காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்காமல் சில நாட்கள் தள்ளிப் போகும் நிலை உள்ளது இதனால் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே சிறிது மழை கிடைத்திருந்தாலும் முறையான பரவலான பருவமழை கிடைக்காத மற்றும் மண் ஈரம் அதிகரிக்கும் நிலை இல்லாமலும் உள்ளது இதன் காரணமாக இதனை நம்பி புரட்டாசிப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீண்டகால தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை உள்ளது மேலும் பெரும்பாலான மேட்டுப்பகுதி மாவட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்ட சூழ்நிலை உள்ளது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருக்கும் நிலங்களில் தண்ணீரை பயன்படுத்தி பயிர்களும் வளராமல் இருக்கும் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தலாம்
1. சொட்டுநீர் பாசன அமைப்புகள் வழியே தண்ணீர் தருவதற்கு கூட வழியில்லாமல் உள்ளவர்கள் தண்ணீரை 2000,1000 லிட் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றின் தண்ணீரை சேகரித்து ,அந்த தண்ணீரை ஒவ்வொரு மரங்களுக்கும் குறைந்தபட்சம் தினசரி 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை கிடைக்குமாறு(தென்னை மரங்களுக்கும்) சுழற்சிமுறையில், மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்சலாம் .இவ்வாறு பாய்ச்சும் தண்ணீருடன் இயற்கை இடுபொருட்கள் ஆன பஞ்சகாவியா இஎம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து பயிர்களுக்கு தருவது கூடுதல் சிறப்பாக அமையும்.
2. சொட்டுநீர் பாசனம் அமைத்த நிலங்களில் சுழற்சி முறையில் தண்ணீர் கொடுக்கும் பொருட்டு சிறிய சிறிய அளவுகளாக அதாவது அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை மட்டுமே ஒருமுறைக்கு என்ற அளவில் பிரித்து பாசனம் செய்யலாம். தெளிப்பு நீர் பாசன கருவிகளை முற்றிலும் மழை வரும் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
3. செம்மண் ,செம்மண் சரளை மற்றும் மணல் வாரி நிலங்களில் உள்ள பயிர்களின் மேற்பரப்பில் உள்ள வட்ட பாத்திகளில் குறைந்தபட்சம் 3 சட்டி அல்லது 15 கிலோ அளவுள்ள கரம்பை மண் பரப்பி அதன்மேல் பாசனம் செய்யலாம்.
4. நிலங்களில் ஆங்காங்கே வளர்ந்துள்ள உயரமான களைச் செடிகளை வேருடன் பிடுங்கி வட்டப்பாத்தி பரப்பி ஒரு மூடாக்காக போடலாம். மேலும் அருகில் கிடைக்கும் காய்ந்த இலை தளைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம்.
5. வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்
பி .பி .எஃப். எம் (PPFM)
எனப்படும் வறட்சியை எதிர்க்கும் தன்மை உள்ள பாக்டீரியா கலவையை பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி முதல் 300 மில்லி வரை கலந்து மாலை வேளையில் 100 மில்லி அசோஸ்பைரில்லம் கலந்து தெளிக்கலாம் .அல்லது பஞ்சகாவியா மீன் அமிலம் இஎம் கரைசல் இவை மூன்றில் ஏதேனும் ஒரு இடுபொருள் உடன் இதில் கலந்து தெளிக்கலாம்.
6. தரைவழி தண்ணீர் கொடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் இல்லாத விவசாயிகள் குறைந்தபட்சம் 200 லிட்டர் தண்ணீர் கிடைத்தால் அதனுடன் அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகவ்யா கலந்து குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் கழித்து மாலை வேளையில் பயிர்கள் மீது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம்
பழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது.
அதாவது நவீன சாகுபடி என்ற பேரால் மிகையான உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிப்பையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அத்தகைய வேறுபாடு என்னவென்றால் விளைபொருட்கள் நிலுவையில் இருக்கும்பொது பச்சையாகவே பறித்து உண்ணக்கூடியதாக முன்னர் இருந்தது. இப்போது பச்சையாக உண்ணத் தகுதியோ சுவையோ இல்லாத விளைபொருட்கள்தான் விவசாயத்தில் உற்பத்தி செய்வது என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சோளம்.
சோளம்
முன்பு வெள்ளைச்சோளம், சடைமஞ்சள்சோளம், கிட்டஞ்சோளம், மொட்டைவெள்ளச் சோளம் போன்ற பல பெயர்களில் விவசாயத்தில் முக்கியப்பங்கு வகித்தது. வெள்ளைச் சோளத்தைக் கார் சோளம் என்றும் சொல்வார்கள்.
மாசி பங்குனிப்பட்டம் அதற்கு ஏற்றது. மஞ்சள் சோளம் பரட்டாசிப்பட்டத்துக்கு மிகவும் ஏற்றது.
சோளப்பயிர் வளரவளர அதன்மணம் காற்றில் மிதந்து வந்து நம்மை மயக்கும்.
அதன் இளம் பயிரில் ஒருவிதமாகவும் கதிர் வெளிவரும்போது ஒருவிதமாகவும் கதிர் பால்பிடிக்கும்போது ஒருவிதமாகவும் விளைந்தபயிர் ஒருவிதமாகவும் மணக்கும்.
உங்களில் எத்தனைபேருக்கு நான் சொல்லும் செய்தி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதாவது வெள்ளைச் சோளப் பயிர் கதிர் பிடிக்கும்நேரத்தில் இரண்டுவிதத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலில் அதன் பால்கதிரை ஒடித்து இரண்டு கைகளாலும் நசுக்கித் தேய்த்து அந்த விளையாத இளஞ்சோளத்தை ருசித்துத் தின்பது. நெருப்பில் சுட்டும் சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும்.
இரண்டாவதாக அதன் அடித் தட்டு (தட்டை என்றும் சொல்வார்கள்). அதை ஒடித்து கரும்பைப் போலவே மென்று சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பாக கரும்பைப்போலவே இருக்கும்.
இது இன்றுள்ள பெரும்பாலோருக்குத் தெரியாது. காரணம் அத்தகைய சோள வகைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.
இப்போது உள்ள சோளவகைகள் எல்லாம் மிகை உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுவையில்லாத அல்லது கசப்புச் சுவை உள்ள சக்கைகள் ஆகும். சோளத்தையே தின்னமுடியாது அப்புறம் அதன் தட்டையைத் தின்பதெங்கே?
உண்மையாகவே இப்போது விளையும் நெல் உட்பட எந்தத் தானியத்தின் வைக்கோல் அல்லது தட்டைகளையும் கால்நடைகள்கூட விரும்பிச் சாப்பிடுவது இல்லை!
இதே கதிதான் கம்பு, ராகி, பயறுவகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்கள், போன்றவற்றுக்கும் ஏற்பட்டது.
இதில் பொதிந்துள்ள மக்கள் உணராத ஒரு உண்மையும் சோகமும் என்வென்றால் முன்னர் இயற்கை உணவு என்கின்ற உணர்வு இல்லாமல் இயல்பாகவே உண்டு வந்தவை ஒழிந்துவிட்டன. இன்று அந்த இடத்துக்குப் பல்வேறு முறைகளில் சமைக்கப்பட்டும் இயந்திரங்கள் அல்லது உயர்வெப்ப அடுப்புகளில் பல ரசாயனக் கலவைகளையும் சேர்த்துச் சுட்டெடுக்கப்பட்டும் வெளிவரும் நச்சுப்பொருட்களைத்தான் உணவென்ற பெயரில் உண்ணும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
முன்பு விவசாயத் தொளிலாளியான ஒரு ஏழைகூட தான் வேலை செய்யும் நிலத்தில் விளைந்த சோளக் கதிரைத் தேய்த்துத் தின்றான். நிலக்கடலைச் செடியைப் பச்சையாகப் பிடுங்கி அதன் காய்களைப் பறித்துச் சாப்பிட்டான். பயறு வகைகளும் கம்பும் ராகியும் அவனுக்கு பசிக்கு உணவாகப் பயன்பட்டன.
நான் அப்படியெல்லாம் சிறுவயதில் உண்டு அனுபவப்பட்டிருக்கிறேன். மாடுமேய்க்கும் மேய்ச்சல்நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் இருந்து செட்டிக்காரச் சிறுவர்கள் கட்டுக்காவலை மீறி கொண்டு வந்து பச்சையாக பசிக்கும் விளையாட்டுக்குமாக உண்பார்கள். நான் உண்டிருக்கிறேன்.
ஆனால் அந்தப் பாரம்பரிய முறைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டதால் இன்று ஒரு ஏழைகூட வெந்ததையும் ஆலையில் இருந்து வெளிவரும் உணவுப்பண்டங்ளையும் உண்டுவாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் உள்ள சிறு கடைகளில்கூட வெளிநாட்டுக் குளிர்பான வகைகள் மதுக்கடைகளில் மதுவகைகளும் குவிந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நோயெதிர்ப்பு சக்தியை இழந்து மருத்துவமனைகளும் மருந்தும்தான் கதி என்று நிறையப் பேர் வாழும் நிலை உள்ளதை அனைவரும் அறிவோம்.
இன்றைய நவீன விவசாயம் மக்களை இயற்கை உணவைவிட்டுத் தூர விரட்டியடித்துவிட்டது. இப்போதைய தலைமுறையினர்க்கே அதுபற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்துவரும் தலைமுறையினருக்கு இந்தக் கதையைச் சொல்லக்கூட ஆள் இருக்காது. எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அந்த அனுபவங்களைக் கதைகதையாகச் சொல்லும்போதே ஒரு பக்கத்தில் சோகத்தால் உள்ளம் வேதனைப்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை!
(இந்தப் படத்தில் உள்ளது நவீன ரகம். மனிதனுக்கோ மாட்டுக்கோ ருசிக்காது. பழைய ரகத்தின் படத்தை இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை)
கொய்யா சாகுபடியில் விவசாயியின் அனுபவம் – அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி
திரு. சசிக்கண்ணன் என்ற விவசாயி கொய்யா சாகுபடி செய்துள்ளார் சாதா முறையில் கொய்யா சாகுபடி செய்தால் 15 அடிக்கு ஒரு செடி என்ற அளவில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 120 செடிதான் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் எடுக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி செய்வது வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 8 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யணும் ஒரு ஏக்கருக்கு 500 செடி வரை நடவு செய்யலாம்.
கொய்யா நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 600 கிலோ தொழுவுரம் , அசோஸ்பைரில்லம் 10 கிலோ, பாஸ்போபாக்டீரியா 10 கிலோ, வேம் 10 கிலோ அனைத்தையும் எருவில் கொட்டி நன்றாக கலந்து 1..5 அடி ஆழம், அகலம் உள்ள குழி எடுத்து அதில் நடவு செய்யும் பொழுது ஒரு கிலோ வீதம் உயிர் உரங்களின் கலவையை போட்டு நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
இவ்வாறு தொடர்ந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை உயிர் உரங்களை எருவில் கலந்து போடவும் ஆறு மாதத்தில் காய் வர ஆரம்பிக்கும.
காய்களை பரித்துவிட்டு வளரக் கூடிய செடிகளை ஒரு கணு விட்டு செடியை மேலே வெட்டி விடனும் ஒவ்வொரு கணுவு விட்டும் செடியை வெட்டும்; பொழுது செடியின் கணு பகுதி கருப்பாக இருக்கனும் அவ்வாறு இருந்தால் அவை பக்க கிளை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிந்து அவற்றை வெட்டி விடவும்.
இதேபோல ஒரு மரத்திற்கு 25 பக்க கிளைகள் வரும் வரை வெட்டி வரவேண்டும். பக்க கிளைகள் அதிகமாக வந்தால் தான் நமக்கு மகசூல் கூடும். தொழுவுரம், நுண்ணுரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை காய் காய்க்கும் கவாத்து செய்து கொண்டே இருந்தால் மரமாக வளராமல் செடியாக இருக்கும். செடியாக இருந்தால் காய் தொடர்ந்து ஆண்டு முழுவதும் காய்த்து கொண்டே இருக்கும்.
ஒரு காய் 200 கிராம் அளவு இருக்கும். ஒரு மரத்துக்கு 50 காய் என்று வைத்தால் கூட 10 கிலோ வரும் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை காய் வரும் என்று வைத்தால் மொத்தம் 30 கிலோ காய் கிடைக்கும்.
ஒரு கிலோ விலை ரூபாய் 30 என்று விற்றால் ஒரு மரத்துக்கு 800 ரூபாய் கிடைக்கும் (செலவு ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரும்) – 500 மரத்துக்கும் மூன்று லட்சம் வருமானம் கிடைக்கும் செலவு போக நமக்கு நல்ல லாபம் தான்.
காளான் என்றால் என்ன?
குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக பயன்படுவது தாவரங்களுக்கென இருக்கும் பச்சையம் என்ற நிறமி.காளானும் தாவரம்தான். ஆனால் பச்சையம் இல்லாத தாவரம்.பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் ஒளிச்சேர்க்கை செய்து தானாகவே தனக்கான உணவை தயாரிக்க முடியவில்லை.அதனால், சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கிறது.
தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது.