Category: Agriculture News

விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி

விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி

விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி

விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி – பயறு வகைகளை விதைக்கும் போது ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தால் அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்து  நல்ல விளைச்சல் பெறலாம்.

ரைசோபிய விதைநேர்த்தியின் தேவை 

வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும். தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது.

இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.

பயறு வகை பயிரிடாத நிலத்திலும் ரைசோபிய நுண்ணுயிர்கள் குறைவான அளவில் இருக்கும்.

தொடர்ந்து பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.

ஆனால் மண்ணில் இடப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள் நிலத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி நிலத்தில் ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது.

ஆகவே பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம்.

தேவையான பொருட்கள்:
  1. ரைசோபிய நுண்ணுயிர் உரம்
  2. பயறு வகை விதைகள்
  3. விதை நேர்த்தி செய்யத் தேவையான பாத்திரம்
  4. குளிர்ந்த 10 சத மைதா கஞ்சி (அல்லது) அரிசி கஞ்சி
  5. அந்தந்த பயிறு வகைகளுக்குரிய நுண்ணுயிர் ராசிகள்
விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி செய்முறை:

ஒரு ஏக்கருக்கு தேவையான தேவையான 10 கிலோ சான்று விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விதை நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு பாக்கெட் அல்லது 200 கிராம் ரைசோபிய உயிர் உரம் தேவைப்படும்.

10 சதவீத மைதா கஞ்சியை தயார் செய்து, 10 கிலோ விதைக்கு 1 லிட்டர் கஞ்சி கொட்டு அனைத்து விதைகளும் ஒட்டும் தன்மை உடையதாக இருக்குமாறு நன்கு கலக்க வேண்டும்.

பின்பு தேவையான உயிர் உரங்களை (ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்) விதைகளின் மேல் தூவி தொடர்ந்து கலக்க வேண்டும்.

மைதா கலந்த விதைகளை உயிர் உரத்துடன் கலக்கும்போது மைதாவின் ஒட்டும் தன்மையினால், ஒரேமாதிரியான விதை மூலாம் கிடைக்கிறது.

விதைகளை நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்புக்கு பயன்படுத்தலாம்.

பரிந்துரை:

ஒரு கிலோ விதைகளுடன் 10 சதவீத மைதா கஞ்சி அல்லது 200லிருந்து 300 மில்லி கஞ்சியுடன் 1 கிலோ விதைக்கு 200 லிருந்து 300 கிராம் உயிர் உரத்தை கலப்பதனால் வயலில் பச்சைப்பயிறு, உளுந்து, பருத்தி, தக்காளி மற்றும் கத்தரி ஆகியவற்றின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.

நன்மைகள்:

உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் மண்ணின் வளத்தை அதிகப்படுத்தலாம்.
விதைகளை விதைக் கருவிகள் கொண்டு விதைக்க ஏதுவாகிறது.

ஒத்த விதை அளவு மற்றும் அமைப்புடைய விதைகளைப் பெறமுடியும் மற்றும் விதையைக் கையாளும் முறை எளிதாகின்றது.

விதை கருவி கொண்டு விதைகளைப் பிரிக்கும்போது விதைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் எளிதாக பிரிக்க உதவுகின்றது.

சிறிய மற்றும் வேறுபட்ட உருவ அமைப்புடைய விதைகளை உயிர் உரம் கொண்டுவிதை மூலாம் பூசும் போது அதனைக் கையாளும் முறை எளிதாகின்றது.

மிகச்சிறிய விதைகளைக் கூட இதன் மூலம் துல்லியமான முறையில் விதைத்து உரிய பயிரின் அளவை பெறமுடியும்.

விதை மூலாம் பூசுவதால் விதையின் எடை அதிகமாவதோடு தூவுதல் விதைப்பு ஏதுவாக அமைகின்றது.

சிறிய விதைகளைக் கையாளும் முறை எளிதாவதுடன் விதை அளவும் குறைக்கப்படுகின்றது.

ஆத்தி மரம் இடிதாங்கி மரம்

ஆத்தி மரம் இடி தாங்கி மரம்

ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.

Continue reading

அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு

கருவேல மர பட்டை

குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி
10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Continue reading

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி

கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள்

விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை.
அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை.
ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள்.
அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள்.
அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது.

Continue reading

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்

மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்: எப்படி?
குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு பகுதியில் பயிரிடப்படுகிறது.

Continue reading

பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்

பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லி

ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.
பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும்.
பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது?

Continue reading

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்

அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.
உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்

Continue reading