Category: Social Media

கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent

கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent

சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்

Continue reading

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் insects

 இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

அரப்பு மோர் கரைசல்

இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும் இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கிறது. பூச்சிகளை விரட்டுகிறது பூசண நோயைத் தாங்கி வளர்கிறது இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி?
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.

தயாரிக்கும் முறை:

நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.

கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.

பிற பயன்கள்:

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

குறைந்த செலவில்,  விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:

அரப்பு – மோர் கரைசல்:
தேவையான பொருட்கள்:

5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிப்பு:

மோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும். நைலான் வலையை பயன்படுத்த்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

குறிப்பு:

எங்களுடைய இலக்கு விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இதனால் தான் நாங்கள் பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளைப் பரிந்துரை செய்கிறோம். அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை நாம் அது சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. நீங்கள் மோர் இந்த திரவ சேர்க்க புளித்துப் விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி (கொக்குலசு ) விட்டு, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழம் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.

பயன்பாடு:

500ml to 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்றன் திறன் வாய்ந்தது அதே சாத்தியம் உள்ளது.

மோர் கரைசல்- மேம்படுத்தப்பட்ட முறை :

இந்த மோர் கரைசல் ஒரு செய்ய எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இதன் முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று அதே பயன்கள் உள்ளன.

தேவையான பொருட்கள் :

மோர் 4 லிட்டர் , இளநீர் 1 லிட்டர் , பப்பாளி பழ கூழ் 250ml , மஞ்சள் தூள் 100 கிராம் , பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம் . வேம்பு, துளசி , அரப்பு , சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா. இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்

அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்
அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்

அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்

  1. சான்றளிப்புக்கான பொதுவான விதிமுறைகள்
  2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்
  3. விண்ணப்படிவத்தை மதிப்பீடு செய்தல்
  4. ஆய்வுக்கான நேரத்தை அட்டவணையிடுதல்
  5. ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்
  6. குழு சான்றளிப்பு வழிமுறைகள்
  7. சான்றளிப்பை தொடருதல்
  8. அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள்
1. சான்றளிப்புக்கான பொதுவான வழிமுறைகள்

அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவுசெய்தவர் இயங்க வேண்டும். அங்கக உற்பத்திக்கான தேசிய வழிமுறைகளின் படி நடக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தேன், சேகரித்தல், பதப்படுத்துதல், பொதி கட்டுதல், சேமிப்பு, அட்டையிடுதல் மற்றும் போக்குவரத்துக்கான பொதுவான வழிமுறைகளை வழங்கியுள்ளது.அங்கக உற்பத்திக்கான திட்டத்தை ஆண்டுதோறும் தயாரித்து, அமல்படுத்தி, மேம்படுத்த வேண்டும். அதை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும்.உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, அங்ககமில்லாத சான்று உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, பகுதிகள், அமைப்புகள் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை உயர் அதிகாரிகள், அபிடா அதிகாரிகளால் கள ஆய்வு செய்ய வேண்டும்.5 வருடங்களுக்கு குறையாமல் உள்ள அங்கக செயல்முறைக்காக பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அங்கரிக்கப்பட்ட அலுவலர்கள், மாநில (அ) மத்திய அரசு அதிகாரிகளை பதிவேடுகளை வேலை நேரங்களில் மறு ஆய்வு செய்யவும், தேசிய அங்கக உற்பத்தி திட்டம் விதிகள் மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையால் விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.செயல்படுத்துபவர் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு தகவல் பின்வருவனவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும்.விண்ணப்பத்தில், உற்பத்தி பிரிவு, அமைந்துள்ள இடம், வசதிகள், கால்நடை(அ)ஏதாவது ஒரு பொருள் செயலில் உள்ளதா என்றும்சான்றளிப்பு செயல்களில் (அ) சான்றளிப்பு செயல்களின் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தேசிய அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளின் வழிப்படி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும்.

2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம்

அங்கக உற்பத்தி செய்வதை பதிவு செய்யவதற்காக விண்ணப்பத்தை உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பின்வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும்.

அங்கக உற்பத்தி (அ) கையாளும் முறை திட்டம்விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களான பெயர், முகவரி, தகவல் பெறும் நபரின் விபரம், தொலைபேசி எண் போன்றவை இடம் வேண்டும்முன்பே விண்ணப்பம் அளித்தவர்களின்  பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.வேறு ஏதாவது தகவல் இருந்தாலும் குறிப்பிட வேண்டும்.பதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் ஒரு முறை, பயணச் செலவு ஒரு முறை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில் குறிப்பிடப்படும் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம்  செய்தல்

விண்ணப்பம் -1 அ விண்ணப்பம் ஈ விண்ணப்பம் -21 விண்ணப்பம் -11

 

3.விண்ணப்பத்தை மறு ஆய்வு செய்தல்

விண்ணப்பத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
எந்த தகவலாக இருந்தாலும் செயல்படுத்துபவருக்கு தெரிவிக்க வேண்டும். செயல்படுத்து பவரும் உடனடியாக தேவைப்படும் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தாத விண்ணப்பங்கள் மறு ஆய்வு செய்யப்படாது.
தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையால் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் தவிர்த்தல் போன்றவை முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பித்தவருக்கு திருப்பி அனுப்பப்படும்
விண்ணப்பங்களுக்காக செலுத்தப்பட்ட கட்டணங்கள் திருப்பி தரப்படமாட்டாது
பதிவிற்குப்பிறகு (அ) பதிவு செய்த விண்ணப்பத்தில் கள ஆய்வு பற்றி தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கட்டணம் மட்டும் திருப்பி தரப்படமாட்டாது.

 

4.ஆய்வை அட்டவணையிடுதல்

முதல்கட்ட கள ஆய்வு நடைபெறும் நேரத்தை குறிக்க வேண்டும். நிலம், வசதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும்போது செயல்படுத்துபவர் அந்த அமைப்பை பற்றி விவரிக்க வேண்டும். பதிவு செய்த நாளிலிருந்து 6 மாதம் வரை முதல்கட்ட ஆய்வு தாமதிப்படலாம். அதனால் அங்கக உற்பத்தி செய்பவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.
அங்கக உற்பத்தி செய்பவர் முன்னிலையே கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வருடாந்திர ஆய்வு ஒரு முறையும், கூடுதலாக ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படும்.

5.ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல்

ஆய்வின் போது, தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் விதி முறைகளின் படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
அங்கக உற்பத்தி செய்பவர் சமர்பித்த திட்ட ஆவணத்தை விதிமுறைகளின்படி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்
தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது மண், நீர் மாதிரி, கழிவுகள், விதைகள், பயிர் திசுக்கள், பயிர் விலங்கு மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் பற்றிய மாதிரியை அனுப்ப வேண்டும்.
அனுப்பபட்ட மாதிரியை 17025 ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை உற்பத்தி செய்பவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கள ஆய்வின் போது, அங்கக உற்பத்தி செய்யும் நபருடன் பேட்டி காண வேண்டும். ஆய்வாளர் மற்ற தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.
ஆய்வு முடிந்தவுடன், சரிபார்ப்பதற்கான பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும். உற்பத்தி செய்பவரிடமிருந்து  கையெழுத்து வாங்க வேண்டும்.
குறிப்பிட்ட அங்கக உற்பத்தி செய்பவர் மற்றும் மதிப்பீ்ட்டாளருக்கு  சரிபார்க்கும் பட்டியல், ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்.
மதிப்பீட்டாளரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஏதாவது தகவல் மேலும் தேவைப்பட்டால் உற்பத்தி செய்பவருக்கு தெரிவிக்க வேண்டும்.
விதிமுறைகளின் படி இல்லாமல் இருந்தால், உற்பத்தியாளர்களிடமிருந்து விளக்கம் கேட்க வேண்டும்.

 

6. குழு சான்றளிப்பு விதிமுறைகள்

பொதுவாக தேவைப்படுபவை

இந்த அமைப்பு விவசாயி குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஒப்பந்த உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் பிரிவுக்கு அளிக்கப்படுகிறது

உற்பத்தி குழு ஒரே மாதிரியான உற்பத்தி அமைப்பு மற்றும் ஒரே மாதிரியான புவியியல் அமைப்புக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும்.

4 எக்டருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் அதற்கு அதிகமாக உள்ளவர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள். இவர்களை தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். பண்ணையின் மொத்த பரப்பு குழுவின் மொத்த பரப்பில் 50 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

பதப்படுத்துபவர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரு குழுவின் கீழ் வருவார்கள் ஆனால் அவர்கள்  தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையில்  வருடந்தோறும் ஆய்வு செய்யபட வேண்டும்.

குழுவின் அமைப்பு

குழுக்கள் சட்ட அளவில் மதிப்பும், தனிப்பட்ட அமைப்பாகவும் இருக்க வேண்டும்

உள்கட்டுபாட்டு அமைப்பை அந்த குழுக்கள் வைத்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட செயல்பாடுகளை செயல்படுத்துவதற்காக அந்தக் குழுவிலிருந்து தனிப்பட்ட நபர்கள் குழுக்கள் அமைக்க வேண்டும்.

உள்கட்டுப்பாட்டு அமைப்பை அமல்படுத்துவதற்கும், ஏற்படும் பிரச்சனைகளை அறியவும் உள் தர அமைப்பு கையேடு ஒன்றை அந்த குழுக்கள் உருவாக்க வேண்டும்

குழு சான்றளிப்புக்கான உள் விதிமுறைகள்

தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் வழி முறைகளின் கீழ் உள்ளூர் மொழியில் உள் விதிமுறைகள் தயாரிக்கப்படும்.

உற்பத்தி பிரிவின் வரையறை, மாற்றுவதற்கான முறை, இணை உற்பத்தி, மாற்றுவதற்கான காலம், அனைத்து உற்பத்தி பிரிவுக்கான உற்பத்தி விதி முறைகள், அறுவடை மற்றும் அறுவடையின் சார் செய்முறைகளை உள்ளடக்கி உள் விதிமுறைகள் இருக்க வேண்டும்.

வாங்குவதற்கான வழிமுறை, வர்த்தக வழிமுறை, பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

சான்றளிப்புக்கு மானியம் வழங்குதல்

தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, பதிவு சான்றிதழ், பரிமாற்ற சான்றிதழ், பொருள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

சான்றளிப்பு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவைக் கொண்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது

நோக்கத்திற்கான சான்றிதழ்

சான்றளிப்புக்கு மறுப்பு தெரிவித்தல்

விதிமுறைகளுக்கு அங்கக செயல்பாடுகள் ஒத்துவராமல் இருந்தால், உற்பத்தி செய்பவருக்கு சான்றிதழ் பற்றித் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு சான்றளிப்புத் துறை சான்றிதழ் வழங்கும் முன் பிழைகளைத் திருத்த வேண்டும்.

மற்றொரு சான்றிளிப்பு அமைப்புடன் இணைந்து உற்பத்தி செய்பவராக இருந்தால், புதிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை விண்ணப்படிவத்தில் உள்ள பிழைகளை சரிபார்க்க வேண்டும்.

சான்றிதழ்கள் மறுப்பு பற்றி உற்பத்தியாளருக்கு எழுத்து மூலம் அறிக்கை தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்க வேண்டும்.

 

7. சான்றளிப்பை தொடருதல்

சான்றளிப்பை தொடர வேண்டுமானால், கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும்.

உற்பத்தி(அ) கையாளுவதற்காக புதுப்பிக்க வருடாந்திர அறிக்கையை உற்பத்தியாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

புதுப்பிப்பதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை சரிபார்க்க வேண்டும்.

மேல்முறையீடு

சான்றிதழ் மறுப்பு, தடைவிதிப்படி போன்றவற்றிற்கு எதிராக பதிவு செய்த உற்பத்தியாளர் மேல் முறையீடு செய்யலாம்.

அறிக்கையில் குறிப்பிட்ட நாளில் (அ) 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அதிகாரிகளின் முடிவை கடைசி முடிவாகும்.

 

8.அங்கக சான்றளிப்பிற்காக தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகள்

தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளை பதிவிளக்கம் செய்தல்
மேலும் விபரங்களுக்கு
இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை, 1424 A, தடாகம் சாலை, ஜி.சி.டி. அஞ்சல்
கோயமுத்தூர் – 641 013, தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: 0091 422 2432984, தொலைபிரதி: 0091 422 2457554,
மின்னஞ்சல்: [email protected], வலைத்தளம்: www.tnocd.net

எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்?

எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கையே இல்லாத முழுமையாக இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த பொருட்கள் மட்டுமே உட்கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று தற்சமயம் ஆசைப்படுகிறார்கள்.

Continue reading

தென்னை ஈரியோபிட் கரையான்

தென்னை ஈரியோபிட் கரையான் coconut tree
தென்னை ஈரியோபிட் கரையான்:

 

அறிகுறிகள்:

முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்.

காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்.

தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்.

உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்.

பூச்சியின் விபரம் :

இளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்.

இதன் பாதிப்பு தவிர்க்க வை உப்பு கலந்து மஞ்சள் தூள் கலந்து
மரத்தின் மேலே வைக்கிறார்கள்​

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்
செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபி செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக!

நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்?

வணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் பின் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.

இயற்கை விவசாயத்தின் மேல் தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

நான் இரசாயன விவசாயம் செய்துவந்த போது, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது, படிப்படியாக இந்த எண்ணம் வலுப்பெற்று இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்து இயற்கைக்கு மாறவேண்டிய அத்தியாவசியம் தற்போதுதான் அனைவருக்கும் புரியவந்துள்ளது.

பசுமைபுரட்சியில் சாதனை படைத்த மாநிலம் பஞ்சாப், ஆனால் தற்போது பஞ்சாப் விவசாயிகள் மைராடா பயிற்சி மையத்திற்கு வந்து இயற்கை விவசாயம் கற்று வருகின்றனர். அவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, மண் எந்த அளவு கெட்டுப்போயுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.

“எங்கள் வயல்களில் இரசாயன உரம் போட்டு போட்டு உப்பு படிந்து விட்டது, அந்த உப்பை நீக்காமல் விவசாயமே செய்ய முடியவில்லை. நிலத்தில் இருந்து நான்கு அங்குல ஆழத்திற்கு மேல் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டுவிட்டுதான் தற்போது விவசாயம் செய்யமுடிகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மண் தாய் என்றால், அதில் மடி போன்றது மேல் மண்; அந்த மேல் மண்ணில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையை நோக்கித்தான் விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்படும் போது, இந்த நிலை எல்லா மாநிலத்துக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வும், இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இயற்கை விவசாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.

பொன்ன காப்பாத்துனா வீடு செழிக்கும்; மண்ண காப்பாத்துனா நாடு செழிக்கும்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ! அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கூட இயற்கை விவசாயத்தோட அவசியத்த செரியா புரிஞ்சுகிட்டு, இப்போ ஒட்டுக்க அல்லா நெலத்துலயும் இயற்கை விவசாயத்த செய்யுறேனுங்க!

தற்போது என்னென்ன சாகுபடி செய்து வருகிறீர்கள்?

நான் வழையையும் மஞ்சளையும்தான் சாகுபடி செய்துவருகிறேன், அதிலும் முக்கியமா செவ்வாழையைத்தான் பயிர் செய்கிறேன். இந்த வருஷம் ஒரு ஏக்கரில் செவ்வாழை இருக்கு, 10 மாதப்பயிர் அதில் ஊடுபயிரா மஞ்சள் போட்டிருக்கேன், மற்றொரு ஏக்கரில் செவ்வாழை நட்டு 4 மாதம் ஆகிறது, அதில் தட்டைப்பயிரை ஊடுபயிரா போட்டிருக்கேன். வாழை நடவு செய்யும்போது சிறிய கன்றுகள் மற்றும் பெரிய கன்றுகள் என பிரித்து தனித்தனியாக நடுவேன், இதனால் கன்றுகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.

வாழையில் மூடாக்கு மற்றும் உயிர் மூடாக்கு எப்படிச் செய்வது?

வாழையில் களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு அவசியம், வாழையில் தட்டைப்பயிரை ஊடுபயிராக போடுவது நல்லது, வாழைக்கட்டை நடும் போதே தட்டை பயிரைத் தூவிவிடவேண்டும். தட்டைப்பயிர் வேகமா வளர்ந்து நல்லா மண்ணை மூடிக்கும், சூரிய வெளிச்சம் மண்ணில் படாத அளவு மண்ணை மூடிடும். தட்டைபயிரை சில நேரம் காய்ப்புக்கும் விடுவேன், சிலநேரம் பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதும் விடுவேன்.

உளுந்து, பாசிப்பயிரையும் ஊடுபயிரா போடுவாங்க ஆனா உளுந்தும் பாசிப்பயிரும் வேகமா வளர்ந்து மண்ணை மூடாது, அதனால் களைகள் அதிகமா வளர்ந்துடும். எனக்குத் தேவைப்பட்டால் பக்கத்தில் உள்ள பண்ணைகளில் கிடைக்கும் சோளத்தட்டையையும் மூடாக்காக போடுவேன். மஞ்சள் இல்லாதபோது பாகல், பீர்க்கன் போன்றவையும் விதைத்து விடுவேன். உயிர் மூடாக்காக மண்ணை போர்த்துவதோடு கனிசமான காய்கறிகளும் கிடைக்கும்.

அட சாமி… அண்ணா ரொம்ப வெகராமத்தா மூடாக்கு போடுறாப்புடி பாருங்கோ! நம்ம ஊர்ல ரொம்ப விவசாயிக நெலத்துல பயிர்களுக்கு பக்கத்தாப்புல ஒரு செடிகூட இருக்க கூடாதுன்னு களையெடுக்க ஆள் போட்டு, ரொம்ப செலவழிப்பாங்கல்லீங்கோ! ஆனா… அதெல்லாங் வேஸ்ட்டுங்கோ! பயிர்களுக்கு பக்கத்தாப்புல இப்புடி ஊடுபயிரா மூடாக்கு போடுறது இயற்கை விவசாயத்துல ஒரு தொழிற்நுட்பமுங்க!

மூடாக்கு போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

மூடாக்கு போடுவது எந்த அளவு அவசியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மூடாக்கை சரியான முறையில் பராமரிப்பது. மூடாக்கு இட்ட நிலத்திற்கு கண்டிப்பாக வடிகால் வசதி இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சரியான அளவு இருக்கும் போது மட்டும்தான் அளவான ஈரப்பதம், நல்ல காற்றோட்டம் மற்றும் மண்ணில் பொலபொலப்புத் தன்மை ஏற்பட்டு வாப்சா என்ற நிலை உருவாகி இருக்கும்.

மண்ணில் இயற்கை விவசாயம் ஏற்படுத்திய மாற்றம்…

கடந்த எட்டு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருவதால் எனது நிலத்தில் மண் வளமாக மாறியுள்ளது. இதை நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம். இப்படிப்பட்ட சூழலை இயற்கை விவசாயப் பண்ணைகளில் மட்டுமே காணமுடியும்” என்று நிலத்தை எங்களுக்கு காட்டினார்.

வாழைத் தோப்பில் உள்ள மூடாக்கை கரையான்கள் தின்று கொண்டிருந்ததையும், அதனால் ஏற்பட்ட துளைகளினால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிந்தது. உச்சிவெய்யில் நேரத்திலும் மண்ணை தோண்டிப் பார்த்ததில், மண் மிக குளிர்ச்சியாக இருந்தது. மண்ணை கையில் எடுத்து பார்க்கும்போது மண்புழுக்கள் துளையிட்டதற்காக அடையாளங்கள் நன்றாகத் தெரிந்தன, மேலும் மண் பொறுபொறுப்புத் தன்மையுடன் குருணை குருணையாக இருந்தது.

இப்போ மனுசங்களோட மனசு இறுக்கமாகிப் போனதுமாறிய அவங்க நெலமும் இரசாயன உரங்களால இறுகிப்போச்சுதுங்க! ஆனா… உண்மையில மண்ணுன்னா நல்லா நம்ம ஆத்தா கடையில இருக்குற பச்சரிசி புட்டு மாதிரி பொல பொலன்னு இருக்கோனுமுங்க! அதுக்கு மண்ணுல மண்புழு அவசியமுங்க. ஆனா… இரசாயன உரம்போட்டா மண்புழு இருக்காதுங்க!

இடுபொருட்கள் என்னென்ன பயன் படுத்துகிறீர்கள்?

இடுபொருட்கள் என்று சொன்னவுடன் ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். எந்த இடுபொருளைச் செய்தாலும் அதன் தயாரிப்பு முறையும் அதை பாதுகாக்கும் முறையும் மிக அவசியம். பாலேக்கர் ஐயா இடுபொருள் தயாரிப்பை எவ்விதம் செய்யச் சொன்னாரோ அதை விட ஒரு பங்கு மேலாகவும் தூய்மையாகவும் செய்ய வேண்டும், அந்த கவனம் இருந்தால்தான் இடுபொருட்கள் நன்றாக வேலை செய்யும்.

உதாரணமாக ஜீவாமிர்த தொட்டியை வெய்யிலில் வைத்துவிடுவது, பழைய சாணத்தை பயன்படுத்துவது, தினந்தோறும் காலை மாலை கலக்கிவிடாமல் அப்படியே விட்டுவிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் புதிய விவசாயிகள், ஈஷா விவசாய இயக்கம் தற்போது நடத்திவரும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் கலந்து கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பயிற்சியினால் விவசாயிகள் சரியான தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மஞ்சள் விதை கிழங்கை பீஜாமிர்தம் நனைத்து நடுவேன், 8 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தருகிறேன், பெரும்பாலும் ஜீவாமிர்தம் தயாரிக்க பழைய கோமியத்தைதான் பயன்படுத்துகிறேன். அதிகப்படியாக கிடைக்கும் கோமியத்தை தனித்தனியாக சேமித்து வைத்துள்ளேன். ஒரு வருடம் பழையதான கோமியம் கூட என்னிடம் இருக்கிறது. ஒரு விவசாயிக்கு அவரது மாட்டை நன்றாகப் பராமரிக்கத் தெரிந்திருக்க வேண்டும், இந்த தன்மை இயற்கை விவசாயத்திற்கு மிகவும் அவசியமானது.

ஐயோ சாமி… என்ன அருமையா சொல்றாப்டி நம்ம ஆறுமுகம் அண்ணா பாருங்கோ! என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா, மாடு மேய்க்காம கெட்டது; பயிரு பாக்காம கெட்டதுன்னு ஒரு பழமொழிய அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! இயற்கை விவசாயமானாலும் விவசாயிக பக்குவமா பாத்தாதானுங்க அதுக்கான பலன் கிடைக்கும். அதைய தானுங்க அண்ணா சொல்றாப்டி.

இறுதியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டவை…

எனது பண்ணைக்கு மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். மாணவச்செல்வங்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

இதற்காக அனுபவ விவசாயிகளை பயிற்றுனராக நியமித்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து சேனாதிபதியாக மாற்றவேண்டும், அவர்கள் மூலம் இரசாயன விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில் நுட்பத்தையும் கற்றுத்தர வேண்டும், என்று அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஆறுமுகம் ஐயாவின் ஆர்வத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக வணக்கங்களைக் கூறிக்கொண்டு விடைபெற்றோம்.

தொகுப்பு
ஈஷா விவசாய இயக்கம்