JADAM method of natural farming

JADAM method of natural farming:
பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது.
பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது.

Continue reading

மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்

மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்

விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம்.

Continue reading

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு.
1. சப்பாத்தி கள்ளி
2. எருக்கு
3. சோற்று கற்றாழை
4. பப்பாளி.
1. சப்பாத்தி கள்ளி
சப்பாத்தி கள்ளி ஒரு செடி ஒரு தென்னை அருகில் இரண்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருந்தால் உரமே தேவை இல்லை.
சப்பாத்தி கள்ளி மிக சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் தாவரம். 98% கெட்ட தண்ணீரையும் சுத்திகரிப்பு செய்யும்.
கால்சியம் சத்து மிகுந்த தாவரம்.பொட்டாசியம் , மக்னீசியம், பயிர் வளர்ச்சி அடைய பாஸ்பரஸ் மிகுந்த அளவு உள்ளது.
2. பப்பாளி
பப்பாளி உள்ள சத்துக்கள் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர்
பப்பாளி வேர்கள் செம்மரம் போன்று நேராக கீழே செல்லும். அடியில் உள்ள சத்துக்கள் பப்பாளி வேர்கள் உறுஞ்ச தென்னை வேர்கள் அந்தவேர்களில் உறுஞ்சி கொள்ளும்.
3. சோற்று கற்றாழை
சோற்று கற்றாழை காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வளரக்கூடியது.
கால்சியம் குளோரின் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. அல்லாய்ன் எனும் பொருள் பாதி அளவு உள்ளது. இது வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளது.
4. எருக்கன்

போரான் சத்து மிகுந்தது.

Kalyan Sundar from Facebook

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Continue reading

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை

பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை

இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.

காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.

Continue reading

தேற்றான்கொட்டை மரம்

தேற்றான்கொட்டை மரம்

தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.

Continue reading