மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்

இலுப்பை மரம்
மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் அழிவின் விளிம்பில் 

 

வெப்ப மண்டல மரமான இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்  இருக்கிறது. இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.
இது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றால் மிகையாகாது. நன்கு வளர்ந்த மரத்தின் ஒரு கன அடி விலை ஆயிரம் ரூபாய்கள்

இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்
இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

இலுப்பை மரத்தின் மருத்துவ குணம்

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. ( மேலும் அறிய)

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ” என்பது பழமொழி.

இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள்

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு , காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

இலுப்பை மரத்தின் வணிக பயன்கள்

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

பணம் காய்க்கும் இலுப்பை மரம்

ஒரு கன அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

சுற்றுசூழல் காக்க இலுப்பை மரம்

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…..

ஒவ்வொருவரும்  அவர் அவர் பங்குக்கு தன் காடுகளில் ஒரு மரமாவது  வளர்க்க பாருங்கள்..

C Raj Pandian

இலுப்பை மரம் பற்றி 

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் – ஒவ்வொரு மாதத்திலும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் பற்றிய விபரங்கள்
சித்திரை:
1. உளுந்து
2. நிலக்கடலை
3. தினை
4 எள்
5.சோளம்
6.நாட்டுக்கம்பு
7.துவரை
8. வெங்காயம்
9. சேனைக்கிழங்கு
வைகாசி :
1. எள்
2. உளுந்து
3. முருங்கை
4. சூரியகாந்தி
5. நிலக்கடலை
6. சாமை
7. ராகி
8. பனிவரகு
9. கருத்தக்கார்
10. ரஸ்தாளி வாழை
11. ஆனைக்கொம்பன் வெண்டை
12. சின்ன வெங்காயம்
13. வெண்டை
14. புதினா
15. சேப்பங்கிழங்கு
16. மஞ்சள்
ஆனி:
1. உளுந்து
2. மஞ்சள்
3. நிலக்கடலை
4. செம்பருத்தி
5. வெண்டை
6. எள்
7. மா
8. சின்ன வெங்காயம்
9. சாமை
10. கொடி பீன்ஸ்
ஆடி:
1. சோளம்
2. ராகி
3. கம்பு
4. துவரை
5. நாட்டுப் பருத்தி
6. வாழை
11. நிலக்கடலை
12. செடிமுருங்கை
13. உளுந்து
14. பாசிப்பயறு
15. சூரியகாந்தி
16. காவளிக் கிழங்கு
17. எலுமிச்சை
18. மிளகாய்
19. குதிரைவாலி
20. வரகு
21. தினை
22. சாமை
23. நேந்திரன் வாழை
24. சேனைக்கிழங்கு
25. பப்பாளி
26. செம்பருத்தி
27. வெண்டை
28. மாப்பிள்ளைச் சம்பா
29. மா
30. மல்லிகை
31. சின்ன வெங்காயம்
32. நாட்டுக்கம்பு
33. நாடன் வாழை
34. கொய்யா
35. கோவைக்காய்
36. வெண்டை
37. கத்திரி
38. தக்காளி
39. முள்ளங்கி
40. பாகல்
41. பீர்க்கன்
42. புடலை
43. கறுப்பு மொச்சை
 ஆவணி:
1. நிலக்கடலை
2. துவரை
3. எலுமிச்சை
4. கொய்யா
5. மா
6. சின்ன வெங்காயம்
புரட்டாசி:
1. பாசிப்பயறு
2. பனங்கிழங்கு
3. உளுந்து
4. எலுமிச்சை
5. கொய்யா
6. கொடுக்காப்புளி
7. நாவல்
8. முல்லைப் பூ
9. சின்ன வெங்காயம்
10. மொச்சை
11. கொண்டைக்கடலை
12. மா
13. புளி
14. வெற்றிலை
15. குண்டு மிளகாய்
16. களாக்காய்
17. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
18. முல்லை
ஐப்பசி:
1. நாட்டுக்கம்பு
2. குதிரைவாலி
3. கேழ்வரகு
4. கறுப்புக்கொள்ளு
5. பனங்கிழங்கு
6. முருங்கை
7. ஓமம்
8. மல்லி
9. குண்டு மிளகாய்
10. நிலக்கடலை
11. எலுமிச்சை
12. ரஸ்தாளி வாழை
13. கொடுக்காப்புளி
14. நாவல்
15. சின்ன வெங்காயம்
16. எள்
17. மா
18. களாக்காய்
19. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
20. முல்லை
கார்த்திகை :
1. எள்
2. தினை
3. கொண்டைக்கடலை
4. செடிமுருங்கை
5. ஓமம்
6. குண்டுமல்லி
7. சூரியகாந்தி
8. எலுமிச்சை
9. நிலக்கடலை
10. மரவள்ளி
11. அறுபதாம் குறுவை
12. கருத்தக்கார்
13. கொள்ளு
14. ரஸ்தாளி வாழை
15. தர்பூசணி
16. நாடன் வாழை
17. பப்பாளி
18. கத்திரி
19. மா
20. பட்டன் ரோஜா
21. சின்ன வெங்காயம்
22. கறுப்புக் கொள்ளு
23. புதினா
24. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
25. கற்பூரவல்லி வாழை
26. முல்லை
மார்கழி :
1. எள்
2. பனிவரகு
3. கத்திரி
4. தென்னை
5. உளுந்து
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
9. கற்பூரவல்லி வாழை
10. முல்லை
தை :
1. தினை
2. செடிமுருங்கை
3. உளுந்து
4. நாட்டுக்கம்பு
5. கொய்யா
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. பாகல்
9. பீர்க்கன்
10. புடலை
11. சேப்பங்கிழங்கு
12. கற்பூரவல்லி வாழை
மாசி:
1. பாசிப்பயறு
2. எள்
3. முலாம்பழம்
4. ரஸ்தாளி வாழை
5. பேயன் வாழை
6. கொய்யா
7. தர்பூசணி
பங்குனி:
1. முலாம்பழம்
ஆண்டுமுழுவதும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் 
1. கீரை
2. செண்டுமல்லி
3. பாகற்காய்
4. வெள்ளரி
5. பப்பாளி
6. தக்காளி
7. உளுந்து
8. வெண்டை
9. கொத்தவரை
10. செடி அவரை
மேலும் படிக்க
பட்டம் பார்த்து பயிர் செய்

கோடை உழவு நன்மை

கோடை உழவு நன்மை

கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம்.

Continue reading

நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை

சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது

Continue reading

நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி

nammlavaar

பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன்.

Continue reading

கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம்.

Continue reading

உழவு – அதிகாரம் 104

tiruvalluvar statue

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -1031.
———-
சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும்.

எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே.

Continue reading