சாணி உருட்டும் வண்டு

சாணி உருட்டும் வண்டு

சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த ” சாணி உருட்டும் வண்டை ” பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது!

காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது!

Continue reading

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா

வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா

தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.

Continue reading

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?

Continue reading

புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

Continue reading

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங்

விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள்

Continue reading

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது

ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம்

Continue reading

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.
என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading