சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த ” சாணி உருட்டும் வண்டை ” பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது!
காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது!