இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது.முழுக்க சுடப்படாத மண் கற்கள்,மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது.
கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை
தரைக்கு டெரகாட்ட டைல்ஸ்.

Continue reading

அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா

அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா

நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது.

Continue reading

கரையான் தீவனம்

கரையான் தீவனம்

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

Continue reading

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த

எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை !!

🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி.ஆர்.ஐ-6,7,8, ஐ.சி.ஜி.வி-350 மற்றும் டி.எம்.வி 13 ஆகிய ரகங்களும், எள்ளில் டி.எம்.வி 7, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ-1,2 ஆகிய ரகங்களும், சூரியகாந்தியில் டி.என்.ஏ.யு, எஸ்.எப்.எச்.ஒய் 2, கோ-5 ஆகிய ரகங்களும் உள்ளன.

Continue reading

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி

மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி

நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும். அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது.
அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்

அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது

அந்த *மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்*

Continue reading

துளைகள் உடைய பேவர் பிளாக்

துளைகள் உடைய பேவர் பிளாக்

பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம்.இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள்.

Continue reading

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல

வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல.

கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.

நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.


இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.

வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.

ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.

நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.

நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை

தொடரும்…
ஹரி