உணவு,உடை,இருப்பிடம்

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள்

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதைத்தான் நமது பெரியோர்கள் “”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்று சொல்லி வைத்தனர்.

Continue reading

உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம்.

Continue reading

Power of Arc Shape and Filler Slab

Power of Arc Shape and Filler Slab

உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம்.

Continue reading

செப்டிக் டேங்க் வீண் செலவு

செப்டிக் டேங்க் வீண் செலவு
செப்டிக் டேங்க் வீண் செலவு

வீடு கட்டும் போது நாம் செய்யக்கூடிய மற்றுமொரு வீண் செலவு இந்த செப்டிக் டேங்க். அதுமட்டுமின்றி இந்த செப்டிக் டேங்கின் மூலம்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால்தான் நெருக்கமான நகர்ப்புறங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு மிகச் சிறந்த மாற்று வழி soak pit முறையாகும். இம்முறை செலவு குறைவான மற்றும் மீண்டும் மீண்டும் கழிவு நீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் செலவில்லாமல் இயக்க முடியும். இதனை எவ்வாறு அமைக்கலாம் என்பதைக் காண்போம்.

முதலில் ஆறு அடிக்கு ஆறு அடி 6 அடி ஆழம் குழி  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசிசி கொண்டு அடித்தளம் அமைக்க வேண்டும். அதன்பிறகு 4 அடி விட்டம் ஒரு அடி உயரம் உள்ள ரெடிமேட் concrete ரிங் வாங்கி கொள்ள வேண்டும். அதனை குழியினுள் பி சி சி யின் மீது ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். பின்பு கவர் ஸ்லாப் கொண்டு இதனை மூடி விடலாம் இதன்பிறகு காங்கிரிட் rink சுற்றி மணலை கொட்டிவிட வேண்டும். அதன்பிறகு கழிவறையின் குழாயை பொருத்த வேண்டும். இதன்மூலம் கழிவறையில் இருந்து வெளிவரும் நீரை சுற்றிலும் உள்ள நிலம் உறிந்து உறிந்து கொள்ளும். திடக்கழிவு பாக்டீரியா மற்றும் பல கண்ணுக்கு தெரியாத உயிரினங்களால் தின்று சிதைக்கப்படும். இது எந்த காலத்திலும் நிறையாது. கொசுவும் உற்பத்தியாகாது. இதனை கீழே படத்தில் காண்பித்து உள்ளேன்

(((( சில பகுதிகளில் கொத்தனார்கள் தொட்டியின் அடிப்பகுதியை மட்டும் பூசாமல் விட்டுவிடுவதை காணலாம் அவர்கள் செலவு செய்தாலும் தப்பித்தார்கள்))))

இதுபோல் ஏற்கனவே செய்துள்ளவர்கள் தங்கள் கருத்துகளை பதியவும் அது மற்றவர்களுக்கும் பயன்படும்

சரி நான் ஏற்கனவே செப்டிக் டேங்க் கட்டி விட்டேன் இப்போது கொசு உற்பத்தி ஆகாமல் எவ்வாறு தடுப்பது.

அதற்கும் வழி உண்டு. அருகிலுள்ள ஏதாவது workshop ல் வேஸ்ட் ஆயில் வாங்கிக்கொள்ளவும் அதனை உங்கள் செப்டிக்டேங்க்னுள் ஊற்றி விடவும் ஆயில் நீரைவிட அடர்த்தி குறைவு என்பதால் எப்போதும் மேலே மிதந்து கொண்டிருக்கும் .இதன்மூலம் கொசு செப்டிக் டேங்கினுள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க முடியும். இதனையும் படத்தில் வரைந்து காண்பித்து உள்ளேன்.நன்றி.


முடிந்தவரை இதனை பகிரவும்

தொடரும்…
உங்களுடன் நான் ஹரி

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்

வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.

நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும்.அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும் குளிரும் செல்லாது.

நீங்கள் பூச்சு வேலை செய்தால் இது நடக்காது.

Continue reading

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க
வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு.

வாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை.

வீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும்.இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது.

மற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது.

பெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும்.

மேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தொடரும்….
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி