கால்நடை

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 1

கேள்வி :

ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்

Continue reading

இஸ்ரேல் விவசாயம்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின்பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.

இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீபொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாததொழில்.

இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு மிகவும் குறைவு. அங்கு உள்ளஇயற்கை வளங்கள் அதைவிட குறைவு. உலகில் பலநாடுகளுக்கு லாபகரமான விவசாயத்தைசொல்லிகொடுக்கும் நாடாக விளங்குகிறது இன்றைய இஸ்ரேல்.

Continue reading

கிளைமேட் சேஞ்ச் ஓர் அறிமுகம்

1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ?

பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின் கோபம் வறட்சி; இவை எல்லாமே கூட்டாக சேர்ந்து கோபப் படுவதும் உண்டு.

Continue reading

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.

Continue reading

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன்

மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும்.

💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம்.

யாரெல்லாம் கடன் பெறலாம்…?

💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள்.

💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம்.

நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் :

💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33.33% மானியம் பெறலாம்.

💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும்.

💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ.5.30 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 மண்புழு உரம் தயாரிக்கும் கடன் திட்டத்தில் ரூ.22,000 வரை கடன் பெறலாம்.

💰 பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டி அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ.26.50 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ.33 லட்சம் வரை கடன் பெறலாம்.

💰 தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ.2.60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

💰 பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம்.

பயனாளியின் பங்கு :

💰 ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெறம் பயனாளிகள் பங்கு தொகை எதுவும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10மூ பங்குத் தொகையாக தர வேண்டும்.

கடன் வழங்கும் வங்கிகள் :

🏠 வணிக வங்கிகள்

🏠 கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள்

🏠 மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள்

🏠 நபார்டு வங்கியில் மறுசுழற்சி நிதி பெறும் நிதி நிறுவனங்கள்

🏠 நபார்டு வங்கியில் கடன் பெறும் திட்டங்களுக்கே இது பொருந்தும்.

விண்ணப்பிக்கும் காலம் :

🕛 2017 – 18-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகள் மூலமாக நபார்டு வங்கிக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணபிக்க வேண்டும்.

🕛 தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கும்.

🕛 தொழில்முனைவோர் தங்களின் திட்ட அறிக்கைகளை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

🕛 வங்கிகள் அதனை பரிசீலனை செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் முதல் தவணை பணம் கொடுக்கப்பட்ட பின் வங்கிகள் நபார்டு வங்கியை அணுகி மானியத்தினைப் பெற்று கொள்ளலாம்.

🕛 இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள நபார்டு கிளை அலுவலகத்தில் இரண்டு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

🕛 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

aiims-patna

‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்!
எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…

ப.கலாநிதி

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரும் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவற்றில் காஞ்சிபுரம், ஈரோடு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மீதமுள்ள இடங்களில், ‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்; இல்லாவிட்டால் பதவி விலகுவோம்’ என்று மதுரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவும் இப்படி அறிவிக்காத ‘மாண்புமிகு’க்கள், எய்ம்ஸ் மருத்துவமனை என்கிற ‘உன்னத’ கோரிக்கைக்காக இப்படி அறிவித்துள்ளனர்.

செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று செங்கிப்பட்டியில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். காவிரி, கச்சத்தீவு என எந்தவொரு வாழ்வாதாரப் பிரச்னையிலும் சட்டமன்றத்தில் ஓரணியில் நிற்காத திமுகவும், அதிமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, செங்கிப்பட்டியில் கைகோர்த்து நின்றார்கள்.

புதுக்கோட்டையில் தான் அமைய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தையும், அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் போது எனக்கு வியப்பு மேலிடுகிறது. ‘எங்கள் ஊரில் கண்டிப்பாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் ‘என்று யாராவது போராடினால், அந்த ஊரில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று பொருள் கொள்ளலாம். அதேபோல, ‘எங்கள் ஊரில் மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்று போராடுவதாக இருந்தால், அந்த ஊரில் நோயாளிகளின் எண்ணிக்கையும், திடீரென இறப்பு விகிதமும் அதிகரித்திருக்க வேண்டும். மேற்கண்ட ஊர்களில் அப்படி ஏதும், நடந்து விட்டதாக ஒரு தகவலும் இல்லை.

இப்போது, என்னிடம் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. அந்தக் கேள்வியை ‘எய்ம்ஸ்’ காதலர்களை நோக்கிக் கேட்கிறேன். ‘உங்கள் எல்லோருக்கும் நலமான வாழ்க்கை வேண்டுமா, அல்லது மருத்துவமனை வேண்டுமா?’ என்பதே அந்தக் கேள்வி.

‘நலமான வாழ்க்கைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், அதற்கு நூறு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரே ஒரு வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, உங்களுக்கு நலமான வாழ்க்கை வழங்கப்படும் அல்லது கிடைத்துவிடும்.

‘மருத்துவமனைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், பின்வரும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கானவை.

மதுரை மாவட்டத்தில், மதுரை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜாஜி அரசு மருத்துவமனை, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவமனை, உசிலம்பட்டி – மேலூர் – திருமங்கலம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், மதுரையில் குடும்ப நல மருத்துவமனை, 17 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள், திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஓமியோமதி மருத்துவமனை ஆகியவை இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு மருத்துவமனை, புகழ்பெற்ற இராஜா மிராசுதார் மருத்துவமனை, கும்பகோணம் – பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், அதிராமபட்டினம் – பாபநாசம் – திருவிடைமருதூர் – ஒரத்தநாடு ஆகிய ஊர்களில் குடும்ப நல மருத்துவமனைகள், 8 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 20 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை – அறந்தாங்கி – திருமயம் ஆகிய ஊர்களில் அரசு தலைமை மருத்துவமனைகள், வளையபட்டியில் குடும்ப நல மருத்துவமனை, 2 தொண்டு நிறுவன மருத்துவமனைகள், 11 தனியார் மருத்துவமனைகள் (பதிவு செய்யப்பட்டவை), 22 அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஆகியவை இருக்கின்றன.

இத்தனை மருத்துவ வசதிகளாலும் கிடைக்காத உடல் நலமும், நோய்களுக்கான தீர்வும்தான் எய்ம்ஸ் மருத்துவமனையால் கிடைத்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்கள். மருத்துவமனைகளால் நோய்களைத் தீர்த்துவிட முடியும் என்றால், புதிய மருத்துவமனைகளுக்கான தேவையே இருக்கக் கூடாது.

உடலைப் புரிந்துகொள்வதும், வாழ்க்கை முறையின் மாற்றத்தைக் கொண்டு வருவதுமே, இப்போதையத் தேவை. அப்படிச் செய்வதன் மூலம் எந்த மருத்துவ முறையையும் கடைப்பிடிக்காமல், மருத்துவமே தேவைப்படாமல் நலமாக வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்துள்ள டெல்லி, புவனேஸ்வர், ஜோத்பூர், பட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், போபால் ஆகிய ஊர்களில் எல்லாம் எல்லா மக்களும் நோய்நொடியின்றி நலமாக வாழ்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஊர்களில் மட்டும் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டதா எனத் தேடிப் பாருங்கள். (எய்ம்ஸ் என்பது அடிப்படையில் மருத்துவக் கல்லூரி. அதனுடன் இணைந்த மருத்துவமனையில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி, சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.)

2012ம் ஆண்டிற்கான மத்திய திட்டக்குழுவின் அறிக்கையின்படி, சுகாதாரத்தில் கேரளா முதல் இடத்திலும், கோவா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் ஆந்திரா எட்டாவது இடத்திலும் உள்ளன. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பீகார் 19ஆவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் 20ஆவது இடத்திலும் தான் இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்க, எதிர்காலத்தில் அமைக்கப்படுவதற்கான வரைவு பட்டியலில் தமிழ்நாடு, கேரளா (கோழிக்கோடு), ஆந்திரா (மங்களகிரி) ஆகிய மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துவிட்டால், என்னவெல்லாம் செய்யலாம் என யோசித்துப் பார்த்தேன். கே.புதுப்பட்டி சாலையோ, கந்தர்வகோட்டை சாலையோ, மானாமதுரை சாலையோ தேசிய நெடுஞ்சாலையாக மாறலாம். அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு உயரும், நில வணிகம் செழிக்கும், கடைகள் கட்டலாம், தங்குமிடங்கள் – விடுதிகள் கட்டலாம், வீடுகளின் வாடகையை உயர்த்தி வாடகைக்கு விடலாம், இப்படி இன்னும் எத்தனையோ ‘லாம்கள்’.

ஆனால், பிரம்மாண்டமான கட்டடங்கள், அவற்றின் நிர்வாகத்திற்கான துணைக் கட்டடங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எனப் பலவிதமான கட்டுமானப் பணிகளுக்கும், அவற்றிற்கு வந்து செல்வோருக்கும், தங்கிச் செல்வோருக்குமான தண்ணீர் எங்கிருந்து எடுக்கப்படும்? நிலத்தடி நீரில்தானே கைவைப்பீர்கள்?

எங்கள் ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்றுப் போராடுகிறவர்களே, உங்கள் ஊருக்கு அடியில் நிலத்தில் இவற்றுக்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதா? அடுத்த 40, 50 ஆண்டுகளுக்கு உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் பற்றாக்குறை ஏற்படாமல் தண்ணீர் கிடைக்குமா? லாரிகளில் கொண்டு வருவோம் என்றாலும், வேறு ஏதோ ஓர் ஊரின் வளத்தைச் சுரண்டுவீர்கள், அப்படித்தானே?

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஓர் இடத்தில் குவியும் குப்பைகளை எங்கு கொட்டுவார்கள்? மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எங்கு கொட்டுவார்கள்? அவற்றிற்கெல்லாம் உங்களது வீட்டு வாசல் புறங்களையும், கொல்லைப் புறங்களையும் தயார் செய்து வைத்துவிட்டீர்களா?

மருத்துவமனை அமைந்தால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வழக்கம்போல கம்யூனிஸ்டுகள் சொல்வார்கள். உங்கள் எல்லோருக்கும் மருத்துவமனையில் ‘டீன்’ வேலையா கொடுக்கப் போகிறார்கள்? உரிய ஏஜென்ஸிகள் மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை நிரப்பிவிட்டு, கடைநிலை ஊழியர்களாகத் தான் உள்ளூர் ஆட்களை ஒப்பந்தத்திற்கு எடுப்பார்கள். ஏற்கனவே விவசாயம் செய்து கொண்டும், ஆடு, மாடுகளை வளர்த்துக் கொண்டும், சுயதொழில் செய்து கொண்டும் யாருக்கும் அடிபணியாமல் தற்சார்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களாக்குவதற்குப் பெயர்தான் வேலைவாய்ப்பா?

வளர்ச்சி, வளர்ச்சி என்று வெறியாட்டம் போட்டது, போதும். அடுத்த தலைமுறைக்கு பசியாற நல்ல உணவில்லை, குடிக்க நல்ல தண்ணீரில்லை, சுவாசிக்க நல்ல காற்று இல்லை. ஒரு பருவத்தில் மழை பொய்த்துவிட்டால், ஓராண்டு காலம் காவிரி ஆறு வற்றிவிட்டால், தாகத்தில் செத்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

அரசுகள், கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என யாரிடமும் இதற்குத் தீர்வு இல்லை. நிலைமை கை மீறிப் போய்விட்டது.

உங்களின் பாதம் பணிந்து வேண்டுகிறேன். வளர்ச்சியைத் தூக்கி வீசிவிட்டு, இயற்கைக்குத் திரும்புங்கள். அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்.