Month: August 2017

கத்திரியில் தண்டு துளைப்பான்

கத்தரியில் புழுக்களற்ற காய்கள் brinjal-eggplant-agriwiki

கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை

கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும்
கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது.

Continue reading

ஊராகும் சொர்க்கம்

thettrankottai

சிறு ஊருக்கு ஓர் அரசமரம்,

பெரு ஆறுக்கு ஓர் தேற்றமரம்,

ஆங்காங்கே சில ஆலமரம், ஆடை அழுக்கு நீக்க அங்காடிப்பக்கமாய் ஓர் பூவந்திமரம் (soapberry),

நீர்நிலைகளுக்கரணாய் பனைமரம்,

நீண்ட நெடுவயலெல்லாம் வேம்பு,

புங்கன், நுணா, நொச்சி, எருக்கு மரம்,

நேந்துக்கர இடத்தில தலவிருட்சம்,

மற்றமரம் மற்ற இடம் என வைக்க

ஊராகும் சொர்க்கம்.

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த chilli

20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம்.

மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மாலை வேளைகளில் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம்.

Continue reading

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு fish farming techniques

இன்று ஒரு தகவல் மீன் வளர்ப்பு🐬🐟🦈 பற்றிய கட்டுரை.:

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

மீன் பண்ணைக்குரியக் காரணிகள்தொகு

குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல், அதிக மேடு பள்ளங்கள், தாவரங்களின்றி, சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள், கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை ஆகும்.குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதவீதம் களித்தன்மையுடைய நிலம், மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும், சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்.

குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின், சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து, அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.

மீன்குளங்களின் அமைப்பு

மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

மீன்குள உருவாக்கம்:பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில், பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால், கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம், விவசாய நிலமாக மாற்றிவிடலாம்.

மீன்குள நீர்வரத்து:குளங்களின் கரைகளை அமைக்கும் போது, நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்களை அமைப்பது நல்லது. பெரும்பாலும், ஆழ்துளைக் கிணறு வகை கொண்ட பண்ணை களில் நிலத்தடி நீர், குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து, நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது, உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும்.

தடுப்பு வலை::இது தவிர அனைத்து குளங்களிலும், வடிமடை குழாய்களுக்கு, தடுப்பு வலைகள் அவசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது, குளத்தின் அடித்தளத்தை, மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி, சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச் சாரத்தில்) அமைத்தல் வேண்டும். இதனால் தேவையான போது, குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும், குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.

மீன்குளக் கரை:குளத்தின் கரை அமைக்கும் போது, கரையின் உயரத்தை, குளத்தில் தேக்க இருக்கும் அதிகபட்ச நீர் மட்டத்தை விட, குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும். குளம் வெட்டும் போது, கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.

தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை, மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.

கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை, வண்டிகள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட, இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.

பெரும்பண்ணை: சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது, மீன் வளர்ப்புக்குளம்(இருப்புக்குளம்) மட்டுமின்றி, நுண்மீன்குஞ்சு வளர்ப்புக் குளமும்,இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளமும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்கள், நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை, குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். இவை, விற்பனை எடையை அடையாத மீன்களைப் பராமரிக்கவும் உதவும்.

மீன்வளர்ப்புக் குளம்

மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன், குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும். மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும்.

மீன் வளர்ப்புக் குளங்களைத் தயாரித்தல்

குளங்களைக் காயவிடுதல்வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்உழவு செய்தல்சுண்ணாம்பு இடுதல்உரமிடுதல் – அ.இயற்கை உரமிடல், ஆ.செயற்கை உரமிடல்மீன்குஞ்சுகளை இருப்புச் செய்தல்.

1.குளங்களைக் காயவிடுதல்

 

வெடிப்பு நிலம்

நீர்வடித்தலின் அவசியம்:குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துவிட்டு, குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு, குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகளும், சேற்றிலுள்ள நச்சுயிரினங்களும் அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி, காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

2.வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்

குளங்களின் அடிப்பகுதியில், அதிக அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது, குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி, நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு, வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

3.உழவு செய்தல்

குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக, குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை, உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள், வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு, நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. எனவே, குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால், குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.

4.சுண்ணாம்பு இடுதல்

நன்மைகள்: குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவது, பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நீருக்கு போதுமான கார, கடினத்தன்மைகளை அளித்தல்நச்சுயிரிகளை அழித்தல்குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல்நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல்நீரில் கலங்கல் தன்மையையும், பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து, அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல்.

இடும் அளவு: மீன் வளர்ப்புக்குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு, மண்ணின் கார அமிலநிலை, குளங்களில் சேரும் கழிவுகளின் அளவு போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. மிதமான கார, அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு, ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோகிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. உழவு செய்தபின் குளங்களில், பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.

5.உரமிடுதல்

அ)இயற்கை உரமிடல்,ஆ)செயற்கை உரமிடல்

அ)இயற்கை உரமிடல்

 

சாணம்

 

கோழிஎரு

குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.

மீன் கொல்லி:இழுவலையால் அழிக்க இயலவில்லையெனில், மீன்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு, பிளீச்சிங் பவுடர், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே, குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே, மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.

ஆ)செயற்கை உரமிடல்

பரிந்துரை:இயற்கை உரமிட்ட பின்பு, சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை, சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக, பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும். ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு, 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் செயற்கை உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.நிலம் களர் மண்ணாக இருப்பின், யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.

இருப்புக் குளம்:பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில், ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும். மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில், செயற்கை உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம், பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

மீன்களை அழித்தல்:களை மீன்கள் ,பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு , பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவையற்ற மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

நன்னீர்மீன்களை இருப்புச் செய்தல்

 

நன்னீர்மீன்குஞ்சுகள்

வளர்ப்புக் காலம்:குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர், நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால், நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம்.

மீன்குஞ்சுகள்:மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்சம் 3 – 4 அங்குல நீளம் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள், இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே, சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 முதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும். இத்தகைய வளர்ந்த குஞ்சுகள், சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும்.

எண்ணிக்கையடர்த்தி:எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம். எனவே, மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு, விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம், நாம் குளங்களுக்கு இடும் உரம், மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.

மீன் இனங்களின் விகிதம்:குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது, இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக, முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பல இனக் கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது, தாவரக் கழிவுகளையும், மக்கிய கழிவுகளையும் உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும். புல், நீர்த் தாவரங்கள், காய்கறிக் கழிவு கிடைக்கும் இடங்களிலுள்ள குளங்களில் புற்கெண்டை இனங்களை, சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம்.சில மாதிரி இருப்பு விகிதாச்சாரங்களின் அட்டவணை வருமாறு;-

வளர்ச்சிக் காரணிகள்:மேற்கண்ட அட்டவணை, அனைத்து நீர் நிலைகளுக்கும் ஏற்றவை எனக் கூற இயலாது. ஏனெனில் மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்,

குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும்,பாசி இனங்களும்,விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி,மண்ணிலுள்ள உரச்சத்து,அதன் கார அமிலத்தன்மை,தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.எனவே, நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களை இணைத்து, கூட்டுமீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற, வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி்ல் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால், அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவுதில்லை.

மீன்குஞ்சுகளின் நிலை:மீன் குஞ்சுகளை வாங்கும்போது, நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம்,வெளிப்புற காயங்கள், செதில்கள் இழந்து இருத்தல், சுறுசுறுப்பின்மை, மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும்.மீன் குஞ்சுகளை, மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை, முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது.

வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கும் குஞ்சுகளை, உடனே குளங்களில் விடாமல், அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும். பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ, 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ, 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து, பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.


 

borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

borewell recharge போர்வெல் ரீசார்ஜ்

borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது.

பல தோட்டங்களில், அரை மணி நேரம்  அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத்தூர் வாரலாமா? என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக… கோடை காலத்தில் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்

கோடை காலங்களில் கிணறுகள், போர் வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்… இன்னும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ… அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்றார் பிரிட்டோராஜ்.

போர்வெல் போடாதீர்கள்!

பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது.

80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால் தண்ணீரைத் தேடி அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும்.

அதிக ஆழத்திற்கு ஊடுருவி. 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்.. போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல் மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்திற்கு இறக்க மாட்டார்கள்.

ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து ‘நீர் மூழ்கி மோட்டார்களை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியாமலோ … அல்லது எடுக்க முடியாமலோ போய் விடும்.

இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!

புது போர்வெல் அமைத்து, தண்ணீருக்குப் பதிலாக வெறும் புகைதான் வந்தது என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர்.

ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான்.

அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம்.

கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, நீர்ச் செறிவூட்டல் செய்தால், தண்ணீர் ஊறி விடும்.

நீர்ச் செறிவூட்டல்

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில் … 6 அடி நீளம், 6 அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடைக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்… மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு கிணறுகளில் சேகரமாகும்.

இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும் போது, ஏற்கனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து… இனி தண்ணீரே கிடைக்காது, என நீங்கள் நினைத்த… இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும்.

மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி… தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணை போட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம்  குறையாமல் இருக்கும்.

பிரிட்டோராஜ்.

 

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி

பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும்.

பாகல் சாகுபடி எப்படி லாபம் தரும்?

பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது.

வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை.

களை குறைவான பயிர்.

அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
பாகல் சாகுபடி செய்ய நல்ல புழுதி உழவும், தொழு உரமும் அவசியம் தேவை.

ரகங்கள்:

சங்ரோ விவேக், செமினிஸ், அபிஷேக், நுண்கம்ஸ், அம்மன்ஜி, மஹிக்கோ, வென்சுரா, எம்ஏஎச்101, அங்கூர் பராக் போன்ற ரகங்கள் பாகல் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
பாகல் வயது 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஆகும்.
விதை ஏக்கருக்கு 300 கிராம் தேவைப்படுகிறது.

பயிர் எண்ணிக்கையை பராமரிக்க எளிய முறை

விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தான் நடவுசெய்ய வேண்டும். ஏனெனில் இதன் சதைப்பற்று கடினமாக இருக்கும்.இதனால் விதை மேலேயே நின்றுவிடும்.
விதைகள் ஈரப்பதம் கிடைக்காமல் முளைப்புத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலே இருந்தால் எலிகள், அணில்கள் தோண்டி எடுத்து வீணாக்கிவிடும்.
இதைக் கருத்தில் கொண்டு சுமார் 30 மணி நேரம் ஊறவைத்த விதைகள் நடவு செய்யும்போது விதைகள் வீணாவது குறைவு.

ஒரு விதை ஒரு ரூபாய் ஆகின்றது. இதனால் இந்த எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

நடவுமுறை:

பொதுவாக தனி பயிர்தான் பாகல் சாகுபடியில் உள்ளது. வரிசை முறையில் 7 அடி து 7 அடி இடைவெளிவிட்டு வாய்க்கால் அமைத்து அந்த கரை மீதுதான் விதை நடவு செய்வார்கள்.
தண்ணீர் வசதி மண்வளத்திற்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். இதில் முன்னோடி விவசாயிகள் உளுந்தை வரிசையில் வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்து 70 நாட்களில் 200 கிலோ வரை மகசூல் எடுத்து சாதனை படைத்த விவசாயிகள் உள்ளனர்.

இதில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் போது அசுவணி பூச்சி பாகலில் குறைவாக உள்ளது. 70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்தபின்னர்தான் பாகல் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும்.

அப்போது விவசாயிகளின் வசதியை ஒட்டி சவுக்கு மிலார் பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல் நடவு செய்து சாகுபடி செய்வார்கள். மேற்கண்ட பந்தல்கள் சுமார் ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.

காய்களின் நிறம், சந்தை நிலவரம்:

விற்பனையின்போது கிலோ ரூ.40 என்றால் நுகர்வோர்கள் கால் கிலோதான் வாங்க விரும்புவார்கள். ஆனால் ஒரு காயின் எடை 150 முதல் 200 கிராம் வரை இருக்கும். ரகங்களால்தான் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். 250 கிராம் காய் வாங்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.

பாகல் சாகுபடி செலவு:

உழவு, பார் அமைப்பு ரூ. 5,000.00
விதை, உரம், பயிர் பாதுகாப்பு ரூ. 5,000.00
நீர் நிர்வாகம், காவல், களை ரூ. 6,000.00
பந்தல்முறை, பிளாஸ்டிக் ரோப் ரூ. 15,000.00
அறுவடை + போக்குவரத்து (60 நாட்கள்)
ரூ.18,000.00
மொத்த செலவு ரூ. 49,000.00

 

பாகல் சாகுபடி வருமானம்:

உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்து கூடுதல்
மகசூல் கிடைத்தால்
= 200 கிலோ து ரூ.50 வரவு ரூ. 10,000.00

பாகல் சாகுபடியில் 60 நாட்கள் அறுவடையில்
10 டன் மகசூல். விற்பனை விலை ரூ.10 என்று
கணக்கில் எடுத்துக்கொண்டால் 10 டன் து ரூ.10
ரூ.1,00,000.00

உளுந்து சாகுபடியில் கிடைத்த மகசூல் ரூ. 10,000.00
மொத்த வருமானம் ரூ. 1,10,000.00

பாகல் சாகுபடி மொத்த செலவு ரூ. 49,000.00
நிகர லாபம் ரூ. 61,000.00

பாகல் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்க வழிகள்:

வீரிய ரகங்கள் அனைத்தும் பலாப்பழத்தில் எப்படி மேல்பகுதி முழுவதும் முள் போன்று உள்ளதோ அதுபோன்று முட்கள் பகுதி பாகலில் உள்ளது.

கோணியில் பேக்கிங் செய்து கோணியில் அடுக்கி அனுப்பும்போது இந்த முட்கள் போன்ற பகுதி உடையாதவண்ணம் அனுப்பினால்தான் பார்ப்பதற்கு காய்கள் பசுமையாக இருக்கும். இல்லையேல் தரம் இரண்டு என்று விலை குறைய வாய்ப்பு உள்ளது.

வேன்களில் செல்லும்போது மூடைகள் அதிக உயரம் அடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கவனிப்பு நம்முடைய உற்பத்தி பொருள் கூடுதல் விலை கிடைப்பதற்கான வழிகளாகும்.

Brittoraj

உலகுக்கே சோறு ஊட்டலாம்

உலகுக்கே சோறு ஊட்டலாம்

விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே..
நீங்கள் விழித்தால் மீண்டும் உலகுக்கே சோறு ஊட்டலாம்…

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்…

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

‘‘ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை…

இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.

இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது.
ஒவ்வொரு நெல்லுமே ஒவ்வொரு மருந்து.

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்… சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

கவுணி அரிசி நாள் பட்ட புண்ணை எல்லாம் ஆற்றும்.

கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

தங்கச் சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா கூட போதும்.

கடற்கரையோர உப்பு நிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.

காட்டுப் பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா…

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்… ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப் பிரச்சனை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.

அது உண்மையில்லை.
விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.

அதை எல்லாரும் மறந்துட்டாங்க..

புது தொழில் நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.

நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

உலகத்துக்கே கத்துக் கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழரான நெல் ஜெயராமன்.

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.

தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகளில் எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பற்றி விவாதிப்போம்.

தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில், ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் ஜெயராமன்.

இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது.

கடந்த ஆண்டு இதே நாள் எனது மகள் Gowri Madhu பாரம்பரிய அரிசி வகைகள்,சிறு தானியங்கள், தூய மஞ்சள்,தானியங்கள்,நாட்டு சர்க்கரை போன்ற பலதரப்பட்ட வகைகளை 100 சதவீதம் ரசாயனம் ஏதும் இன்றி மக்களுக்கு பயன் பட வேண்டி தொடங்கினாள்.

“உரல்” என்ற பெயரில் ஓர் ஆண்டில் வலம் வரத் தொடங்கி உள்ளது.

பசுமை நினைவுடன்…

நீங்களாவது பகிருங்கள்.
அனைவரும் அறிய உதவுங்கள்.