முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

முருங்கைக்காயும் அதன் சுவையும் moringa-oleifera-leaves-and-pods
Agriwiki.in- Learn Share Collaborate
முருங்கைக்காயும் அதன் சுவையும்..!

பொதுவாகவே அசைவப்;பிரியர்;களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால் தான் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை போல் உள்ளது என தோன்றும்.

அதேபோன்று பருப்பு சாம்பார் என்றாலே முங்கைக்காயும், முள்ளங்கியும் இருக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள் உள்ளார்களோ இல்லையோ, ஆனால் விருந்துக்கு சமைத்த சாம்பரில் முருங்கக்காய் இருக்கனும். அந்த அளவிற்கு சுவை தரக்கூடியது முருங்கக்காய்.

எதற்காக முருங்கையை பற்றி சொல்லறாங்கனு பார்க்கறீங்களா… ஏனா.. இப்போ நாம் முருங்கை சாகுபடி பற்றி தெரிஞ்சுக்க போறோம்.

முருங்கை :

🌱 முருங்கைக்காயுக்கு பொதுவாக ஆண்டு முழுவதுமே சந்தையில் கிராக்கி உண்டு. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை.

🌿 தற்போதும் முருங்கையின் விலை அப்படி தான் உள்ளது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 90 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

🌱 ஒரு கிலோ ரூ. 10, ரூ. 20 க்கு விற்க்கப்பட்ட காலம் போய், தற்போது ரூ. 90, ரூ. 100-க்கு கூட முருங்கை கிடைக்காத காலமாக உள்ளது.

🌿 இதனால் முருங்கை செடிகளை பயிரிட்டு தற்போது முருங்கை அறுவடை செய்யும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் மக்கள்தான் மயக்கமாகியுள்ளனர்.

🌱 இவ்வளவு விலை விற்கும் முருங்கை செடிகளை வளப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டம் இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையான முருங்கை காய்களை பெற வீட்டின் வெளிப்புறத்தில் மூன்று அடி நீளமுடைய இரண்டு முருங்கை குச்சிகளை நட்டு வளர்த்தாலே போதும்.

🌿 முருங்கை கீரை முதல் காய் வரை அனைத்தையும் அந்த மரத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

🌱 முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், காய், விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை.

நடவு செய்வதற்கு ஏற்ற பருவம் :

🌱 தற்போது முருங்கை செடி அல்லது முருங்கை குச்சிகளை நடவு செய்து வளர்த்துவதற்கு ஏற்ற பருவமாகும்.

🌿 முருங்கை கன்றுகளை 45 செ.மீ நீள, அகல இடைவெளியில் நட்டு வளர்த்தாலே போதும். இதற்கு பாதுகாப்பு அதிகம் தேவைப்படாது. நன்கு வளரும் வரை ஆடு, மாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும்.

🌱 ஒரு கன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் மற்றும் 1 கிலோ மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை போட்டு முருங்கை மரக்கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரம் கணுவு விடும் போது ஒரு கணுவு விட்டு அடுத்தகணுவை கிள்ளி விடவேண்டும்.

🌿 முருங்கை மரத்தின் அடியிலேயே கிள்ளி விட்டால் அதிக உயரம் வளராமல், மரம் நிறைய போத்துகள் வெடித்து அதிக பக்ககன்றுகளுடன் இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஏற்றினாலே போதும். 6 மாதத்தில் காய் வந்துவிடும்.

🌱 தொடர்ந்து 5 வருடங்கள் வரை காய்வரும். பூச்சி, புழு தென்பட்டால் வேம்பு சார்ந்த மருந்துகள் அடித்தாலே போதும். முருங்கை பூ பூக்கும் சமையத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை குறைக்க வேண்டும்.

🌱 முருங்கையில் பூ எடுக்கும் சமையத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி நன்கு புளித்த தயிரை செடியின் மீது தெளித்துவிட்டால் பூக்கள் கொட்டாமல் காய் நிறைய பிடிக்கும்.

🌿 அப்பரம் என்னங்க.. இன்றே முருங்கை செடி அல்லது மரத்தை நட்டு வளர்க்க ஆரப்பியுங்கள்.