நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்… உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா… ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா…? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா…?. வீடெனப்படுவது அதுதான்….
சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2
