Category: News

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை cattle feed preparation

பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்.

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.
எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம்.
கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

Continue reading

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

Continue reading

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி:  அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

Continue reading

நாட்டுகோழி வளர்ப்பு முறை

நாட்டுகோழி வளர்ப்பு முறை

நாட்டு கோழி வளர்ப்பு எனது பதிவு எண் 1
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=/=/=/=/=/=/=
இன்றைய காலகட்டத்தில் கனவன் மனைவி சம்பாதிப்பது குடும்ப செலவீனத்திற்கே படுதிண்டாட்ட நிலையில் நம்மில் பலர் உள்ளனர் இதுதான் எதார்த்தம்

பொங்கி தின்ன அடுப்பு இல்லாவிட்டாலும்
கொத்தி பொறக்க கோழி வேண்டும் வீட்டில் என்பார்கள் முன்னோர் பழமொழி

நாட்டுகோழி வளர்ப்புதான் இன்றைய கிராமத்து வருமான வங்கி என்றே சொல்லலாம்
ஆம்
செலவீனம் மிக மிக குறைவு
அதிக வருமானம் நாட்டுகோழி வளர்ப்புமட்டும்தான்

டிப்ஸ் 1
/=/=/=/=/=/=

பெட்டைகோழி 6 மட்டும் வாங்கி வீடுகளில் வளருங்கள்

டிப்ஸ் 2
/=/=/=/==/=/=
நாம் வாங்கியுள்ள 6 பொட்டைகோழகளில் கிராப் கோழி என்று கழுத்தில் முடி இல்லாமல் இருக்கும் அந்த ரகத்தில் அவசியம் 3 பெட்டை கோழி வளருங்கள் குஞ்சுகளை பாதுகாப்பதில் இந்த கிராப் கோழிகளுக்கு இடு இணை எதுவும் இல்லை

டிப்ஸ் 3
=/=/=/=/=/=/

பெருவிடை சேவல் கோழி 1 மட்டுமே இனவிருத்திக்கு வைத்துகொள்ளுங்கள் காரணம் சண்டையிடாமல் கோழிகளை பாதுகாக்க இதுதான் சிறந்த வழி

டிப்ஸ் 3
/=/=/=/=/=/=
கோழி முதன்முறையாக முட்டை இட்டால் அந்த முட்டைகள் அனைத்தையும் அடையில் வைக்காதீர்கள் காரணம் முதன்முறை என்பதால் கோழி முட்டை மிக சிறியதாக இருக்கும். முதலில் இடும் முட்டைகளை அடைகாக்க வைத்தால் கோழி உடல் எடைகுறைவதோடு குஞ்சு மிக சிறியதாக பொறிக்கும் பொறித்த குஞ்சுகளுக்கு நோய் வந்தால் அதை தாங்கும் சக்தி குறைவு என்பதால் முதல் முட்டை அடையை களைத்துவிடுங்கள்.

டிப்ஸ் 4
////=/=/=/=/=/
முட்டை அடைகாக்க வைத்த 7 வது நாளில் நாம் நம் வீட்டில் உள்ள டார்ச்லைட் எடுத்து கையில் பக்கவாட்டில் வைத்து டார்ச் அடித்தால் அது நல்ல முட்டையா அல்லது (கூமுட்டையா) என்பதை அறிந்து பொறிக்காத முட்டைகளை முன்பே அகற்றிவிடலாம்.

டிப்ஸ் 5
////=/=/=/=/=/

கோழியை ஆற்று மணலில் வைத்து அடை வையுங்கள் அடை தட்டில் பட்டமிளகாய் ஆணி இவைகளை வைப்பது மூட நம்பிக்கையே அதை தவிர்த்து விடுங்கள்.

டிப்ஸ் 6
////=/=/=/=/=/
ஒரே நேரத்தில் 3 கோழிகள் அடை வைத்து குஞ்சு பொறித்தால் கோழி குஞ்சுகள் குறைவாக இருந்தால் அதை இரண்டு கோழிகளிடம் இரவில் சேர்த்துவிடுங்கள் 2 கோழிகள் பரமாறிக்க தொடங்கும்

கோழி குஞ்சுகள் பாதுக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 7
////=/=/=/=/=/
குஞ்சுகளை பருந்து வர்சா எனும் பறைவகளைவிட கால மாற்றத்தால் காகம்தான் அதிகமாக குஞ்சுகளை தூக்கிசெல்கின்றன இதை தடுக்க எழிய வழி குஞ்சு பொறித்த 30 நாட்கள் வரை அதிகநேரம் வெளியில் மேய விடாதீர்கள்

அல்லது

நரிக்குறவர்களிடம் 100 ரூபாய் கொடுத்தால் இறந்து பல நாள் ஆன பதப்படுத்தபட்ட காகத்தை நம் வீட்டு தூரத்தில் உயரமான மரத்தி்ல் தொங்கவிடுவார்கள் அதை பார்த்தால் எந்த காகமும் கோழி இருக்கும் பக்கமே வராது

டிப்ஸ் 7
////=/=/=/=/=/

இரவில் கீரிபிள்ளை காட்டுபூணை இவைகளிடமிருந்து தவிர்க்க கோழி கூடை அருகே சைக்கிள் டயரை தொங்கவிடுங்கள் பாம்பு என நினைத்து இவைகள் கோழிபக்கம் வராது பனை ஓலை மட்டைகளை கட்டிவிட்டாலும் மிருகங்கள் வராது

பகலில் கீரிபிள்ளை கோழிகுஞ்சுகளை பிடித்தால் அதற்கென தணியாக கூண்டுவைத்து பிடித்து தூரகொண்டுபோய் விட்டுவிடுங்கள்

கோழி பாதுக்காக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 8
////=/=/=/=/=/

1 இஞ்ச் சதுர பைப்பில் 10-5என்ற சைசில் சதுர நீள்வட்ட ஜன்னல் கூண்டு வெல்டிங் செய்து அதில் குஞ்சுகளை பராமறிக்கலாம்
அல்லது கோழிக்கென தணியாக பழைய மீன்வலைகள் வாங்கி நாமே கூண்டு அமைத்து கோழி வளர்க்கலாம்

டிப்ஸ் 9
////=/=/=/=/=/

கோழி வளர்ப்பிற்கு கண்டிப்பாக வங்கியில் கடன்வசதி தருவார்கள் என காத்திருக்க வேண்டாம் நம்ப வேண்டாம் காரணம் செல்வாக்கு மிக்கவர்களுக்கு கொடுத்து கணக்கை சரிகட்டிவிடுவார்கள் அதனால் வங்கியை நம்ப வேண்டாம்

டிப்ஸ் 10
////=/=/=/=/=/

கட்டாயம் கோழிகளை பகலில் அடைத்தவைத்து வளர்க்காதீர்கள் காரணம் நோய் தொற்ற வாய்ப்பு அதிகரிப்பதுடன் கோழிக்கான தீவன செலவீனம் அதிகமாகும் கோழிகள் சண்டையிடுவதை தவிர்க்க மூக்கு வெட்ட வேண்டும் மூக்குவெட்டிய கோழி அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல சிக்கல் உள்ளது எனவே கோழிகளை கொட்டகை கூண்டு அமைத்து அதிக எண்ணிக்கையில் அடைத்து வைத்து வளர்க்காதீர்கள்

பகலில் திறந்துவிட்டு இரவில் வந்து அமருகின்ற முறையை கையாளுங்கள்

டிப்ஸ் 11
////=/=/=/=/=/

கண்டிப்பாக கூடைகள் அமைத்து கோழி வளர்க்காதீர்கள் காரணம் கூடைகளுக்கென பல நூறு அடிக்கடி செலவினம் ஏற்படும்

கோழி குடாப் அமைத்து கோழிவளர்க்கலாம்அதைவிட சிறப்பு இரவில் மரத்தில் அடையும் முறையை பழக்கப்படுத்தவிட்டால் செலவினம் மிக மிக குறைவு

கோழி தீவன தவிடு அல்லது வெளி மார்க்கெட்டில் அரசி கிலோ 7 ரூபாயில் கிடைக்கிறது அதை வாங்கி தீவனமாக பயன்படுத்துங்கள்

கோழிகளுக்கு நோய் வந்தவுடன் சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக எந்த கோழிகளையும் காப்பாற்ற முடியாது 4 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கால்நடை மருந்துமனைக்கு சென்று இலவசமாக கோழி நோய் தடுப்பு பவுடர் மருந்து வாங்கி சோற்றில் கலந்து கோழிகளுக்கு கொடுத்துவிடுங்கள்

நம் வீட்டிற்கு அடிக்கடி விருந்து சமைக்க கோழி தேவைபட்டால் கருங்கோழி என்ற இன கோழிகளை நாம் வளர்க்கும் நாட்டுகோழியுடன் அடைகாத்து பொறிக்கசெய்து வளருங்கள்
அது அதிக எடை கொண்டதாக வளரும் மருத்துவ குணம் உடையது கருங்கோழி

எப்படி என்ன சைசில் இருந்தாலும் நாட்டு பெட்டை கோழி அதிகபட்சம் 500 வரை விற்பனை செய்ப்படுகிறது

நம்வீட்டு குடும்ப செலவீனத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தருவது நாட்டுகோழி வளர்ப்பு மட்டுமே

சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்

சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்

“சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்”

கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal powered Millet Mill) உருவாக்கியுள்ளது .

Continue reading

கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent

கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent

சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்

Continue reading

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் insects

 இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

அரப்பு மோர் கரைசல்

இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும் இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கிறது. பூச்சிகளை விரட்டுகிறது பூசண நோயைத் தாங்கி வளர்கிறது இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.

இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி?
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.

தயாரிக்கும் முறை:

நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.

கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.

பிற பயன்கள்:

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.

குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.

குறைந்த செலவில்,  விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:

அரப்பு – மோர் கரைசல்:
தேவையான பொருட்கள்:

5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிப்பு:

மோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும். நைலான் வலையை பயன்படுத்த்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழ சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

குறிப்பு:

எங்களுடைய இலக்கு விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இதனால் தான் நாங்கள் பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளைப் பரிந்துரை செய்கிறோம். அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை நாம் அது சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. நீங்கள் மோர் இந்த திரவ சேர்க்க புளித்துப் விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி (கொக்குலசு ) விட்டு, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழம் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.

பயன்பாடு:

500ml to 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்றன் திறன் வாய்ந்தது அதே சாத்தியம் உள்ளது.

மோர் கரைசல்- மேம்படுத்தப்பட்ட முறை :

இந்த மோர் கரைசல் ஒரு செய்ய எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். இதன் முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று அதே பயன்கள் உள்ளன.

தேவையான பொருட்கள் :

மோர் 4 லிட்டர் , இளநீர் 1 லிட்டர் , பப்பாளி பழ கூழ் 250ml , மஞ்சள் தூள் 100 கிராம் , பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம் . வேம்பு, துளசி , அரப்பு , சீதாப்பழம், நொச்சி, கற்றாழை மற்றும் புதினா. இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.