Category: Social Media

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க
வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு.

வாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை.

வீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும்.இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது.

மற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது.

பெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும்.

மேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தொடரும்….
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர்.

போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார்.

பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார்.

காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை.

* சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

* நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும்

* கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம்.

* குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.

* சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம்.

* 10 கி.மீ.-இல் என்ன கல் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம். தொலைதூரத்திலிருந் தெல்லாம் வரவழைக்கவேண்டாம். போக்குவரத்துச் செலவு குறையும்.

* மேசை-நாற்காலி போன்ற மரச் சாமான்களை அப்படியே பயன் படுத்தலாம். அதன்மேல் பெயின்ட் அடிக்கவேண்டாம்.

* மூலைச் சுவர்களை அலமாரி வைக்கப்பயன்படுத்தலாம். அங்கு சுவரின் வலிமை அதிகம்.

* வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே கொத்தனார்கள் கவலைப்படுகிறார்கள். காற்றும் வெளிச்சமும் வரமுடியாமல் எல்லாத் திசையையும் அடைத்து விடுகிறார்கள். வடகிழக்கு-தென் மேற்குப் பருவக்காற்றுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டவேண்டும்.

– இவை அனைத்தும் லாரி பேக்கர் கூறும் யோசனைகள். இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

தொடரும்…….
உங்கள் ஆதரவுடன் ஹரி

பசுமை வீடுகள்

பசுமை வீடுகள்

சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம்.இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல.

மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில் வீடு கட்டும் போது பழைய கூரை வீடு போன்ற குளிர்ச்சியான சீதோசண நிலை கிடைக்கும்.

Continue reading

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை cattle feed preparation

பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்.

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.
எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம்.
கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

Continue reading

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

Continue reading

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி

கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி:  அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

Continue reading

நாட்டுகோழி வளர்ப்பு முறை

நாட்டுகோழி வளர்ப்பு முறை

நாட்டு கோழி வளர்ப்பு எனது பதிவு எண் 1
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=/=/=/=/=/=/=
இன்றைய காலகட்டத்தில் கனவன் மனைவி சம்பாதிப்பது குடும்ப செலவீனத்திற்கே படுதிண்டாட்ட நிலையில் நம்மில் பலர் உள்ளனர் இதுதான் எதார்த்தம்

பொங்கி தின்ன அடுப்பு இல்லாவிட்டாலும்
கொத்தி பொறக்க கோழி வேண்டும் வீட்டில் என்பார்கள் முன்னோர் பழமொழி

நாட்டுகோழி வளர்ப்புதான் இன்றைய கிராமத்து வருமான வங்கி என்றே சொல்லலாம்
ஆம்
செலவீனம் மிக மிக குறைவு
அதிக வருமானம் நாட்டுகோழி வளர்ப்புமட்டும்தான்

டிப்ஸ் 1
/=/=/=/=/=/=

பெட்டைகோழி 6 மட்டும் வாங்கி வீடுகளில் வளருங்கள்

டிப்ஸ் 2
/=/=/=/==/=/=
நாம் வாங்கியுள்ள 6 பொட்டைகோழகளில் கிராப் கோழி என்று கழுத்தில் முடி இல்லாமல் இருக்கும் அந்த ரகத்தில் அவசியம் 3 பெட்டை கோழி வளருங்கள் குஞ்சுகளை பாதுகாப்பதில் இந்த கிராப் கோழிகளுக்கு இடு இணை எதுவும் இல்லை

டிப்ஸ் 3
=/=/=/=/=/=/

பெருவிடை சேவல் கோழி 1 மட்டுமே இனவிருத்திக்கு வைத்துகொள்ளுங்கள் காரணம் சண்டையிடாமல் கோழிகளை பாதுகாக்க இதுதான் சிறந்த வழி

டிப்ஸ் 3
/=/=/=/=/=/=
கோழி முதன்முறையாக முட்டை இட்டால் அந்த முட்டைகள் அனைத்தையும் அடையில் வைக்காதீர்கள் காரணம் முதன்முறை என்பதால் கோழி முட்டை மிக சிறியதாக இருக்கும். முதலில் இடும் முட்டைகளை அடைகாக்க வைத்தால் கோழி உடல் எடைகுறைவதோடு குஞ்சு மிக சிறியதாக பொறிக்கும் பொறித்த குஞ்சுகளுக்கு நோய் வந்தால் அதை தாங்கும் சக்தி குறைவு என்பதால் முதல் முட்டை அடையை களைத்துவிடுங்கள்.

டிப்ஸ் 4
////=/=/=/=/=/
முட்டை அடைகாக்க வைத்த 7 வது நாளில் நாம் நம் வீட்டில் உள்ள டார்ச்லைட் எடுத்து கையில் பக்கவாட்டில் வைத்து டார்ச் அடித்தால் அது நல்ல முட்டையா அல்லது (கூமுட்டையா) என்பதை அறிந்து பொறிக்காத முட்டைகளை முன்பே அகற்றிவிடலாம்.

டிப்ஸ் 5
////=/=/=/=/=/

கோழியை ஆற்று மணலில் வைத்து அடை வையுங்கள் அடை தட்டில் பட்டமிளகாய் ஆணி இவைகளை வைப்பது மூட நம்பிக்கையே அதை தவிர்த்து விடுங்கள்.

டிப்ஸ் 6
////=/=/=/=/=/
ஒரே நேரத்தில் 3 கோழிகள் அடை வைத்து குஞ்சு பொறித்தால் கோழி குஞ்சுகள் குறைவாக இருந்தால் அதை இரண்டு கோழிகளிடம் இரவில் சேர்த்துவிடுங்கள் 2 கோழிகள் பரமாறிக்க தொடங்கும்

கோழி குஞ்சுகள் பாதுக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 7
////=/=/=/=/=/
குஞ்சுகளை பருந்து வர்சா எனும் பறைவகளைவிட கால மாற்றத்தால் காகம்தான் அதிகமாக குஞ்சுகளை தூக்கிசெல்கின்றன இதை தடுக்க எழிய வழி குஞ்சு பொறித்த 30 நாட்கள் வரை அதிகநேரம் வெளியில் மேய விடாதீர்கள்

அல்லது

நரிக்குறவர்களிடம் 100 ரூபாய் கொடுத்தால் இறந்து பல நாள் ஆன பதப்படுத்தபட்ட காகத்தை நம் வீட்டு தூரத்தில் உயரமான மரத்தி்ல் தொங்கவிடுவார்கள் அதை பார்த்தால் எந்த காகமும் கோழி இருக்கும் பக்கமே வராது

டிப்ஸ் 7
////=/=/=/=/=/

இரவில் கீரிபிள்ளை காட்டுபூணை இவைகளிடமிருந்து தவிர்க்க கோழி கூடை அருகே சைக்கிள் டயரை தொங்கவிடுங்கள் பாம்பு என நினைத்து இவைகள் கோழிபக்கம் வராது பனை ஓலை மட்டைகளை கட்டிவிட்டாலும் மிருகங்கள் வராது

பகலில் கீரிபிள்ளை கோழிகுஞ்சுகளை பிடித்தால் அதற்கென தணியாக கூண்டுவைத்து பிடித்து தூரகொண்டுபோய் விட்டுவிடுங்கள்

கோழி பாதுக்காக்கும் முறை
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=

டிப்ஸ் 8
////=/=/=/=/=/

1 இஞ்ச் சதுர பைப்பில் 10-5என்ற சைசில் சதுர நீள்வட்ட ஜன்னல் கூண்டு வெல்டிங் செய்து அதில் குஞ்சுகளை பராமறிக்கலாம்
அல்லது கோழிக்கென தணியாக பழைய மீன்வலைகள் வாங்கி நாமே கூண்டு அமைத்து கோழி வளர்க்கலாம்

டிப்ஸ் 9
////=/=/=/=/=/

கோழி வளர்ப்பிற்கு கண்டிப்பாக வங்கியில் கடன்வசதி தருவார்கள் என காத்திருக்க வேண்டாம் நம்ப வேண்டாம் காரணம் செல்வாக்கு மிக்கவர்களுக்கு கொடுத்து கணக்கை சரிகட்டிவிடுவார்கள் அதனால் வங்கியை நம்ப வேண்டாம்

டிப்ஸ் 10
////=/=/=/=/=/

கட்டாயம் கோழிகளை பகலில் அடைத்தவைத்து வளர்க்காதீர்கள் காரணம் நோய் தொற்ற வாய்ப்பு அதிகரிப்பதுடன் கோழிக்கான தீவன செலவீனம் அதிகமாகும் கோழிகள் சண்டையிடுவதை தவிர்க்க மூக்கு வெட்ட வேண்டும் மூக்குவெட்டிய கோழி அதிக விலைக்கு விற்க முடியாது இப்படி பல சிக்கல் உள்ளது எனவே கோழிகளை கொட்டகை கூண்டு அமைத்து அதிக எண்ணிக்கையில் அடைத்து வைத்து வளர்க்காதீர்கள்

பகலில் திறந்துவிட்டு இரவில் வந்து அமருகின்ற முறையை கையாளுங்கள்

டிப்ஸ் 11
////=/=/=/=/=/

கண்டிப்பாக கூடைகள் அமைத்து கோழி வளர்க்காதீர்கள் காரணம் கூடைகளுக்கென பல நூறு அடிக்கடி செலவினம் ஏற்படும்

கோழி குடாப் அமைத்து கோழிவளர்க்கலாம்அதைவிட சிறப்பு இரவில் மரத்தில் அடையும் முறையை பழக்கப்படுத்தவிட்டால் செலவினம் மிக மிக குறைவு

கோழி தீவன தவிடு அல்லது வெளி மார்க்கெட்டில் அரசி கிலோ 7 ரூபாயில் கிடைக்கிறது அதை வாங்கி தீவனமாக பயன்படுத்துங்கள்

கோழிகளுக்கு நோய் வந்தவுடன் சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக எந்த கோழிகளையும் காப்பாற்ற முடியாது 4 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கால்நடை மருந்துமனைக்கு சென்று இலவசமாக கோழி நோய் தடுப்பு பவுடர் மருந்து வாங்கி சோற்றில் கலந்து கோழிகளுக்கு கொடுத்துவிடுங்கள்

நம் வீட்டிற்கு அடிக்கடி விருந்து சமைக்க கோழி தேவைபட்டால் கருங்கோழி என்ற இன கோழிகளை நாம் வளர்க்கும் நாட்டுகோழியுடன் அடைகாத்து பொறிக்கசெய்து வளருங்கள்
அது அதிக எடை கொண்டதாக வளரும் மருத்துவ குணம் உடையது கருங்கோழி

எப்படி என்ன சைசில் இருந்தாலும் நாட்டு பெட்டை கோழி அதிகபட்சம் 500 வரை விற்பனை செய்ப்படுகிறது

நம்வீட்டு குடும்ப செலவீனத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தருவது நாட்டுகோழி வளர்ப்பு மட்டுமே