தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி

வானகத்தில் மூன்று மற்றும் ஆறு மாத கால தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி.

என்னுடைய நோக்கங்கிறது…
இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும்.

இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது.

இந்த ஆறு மாத பயிற்சியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும்.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம்.

ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம்.

கட்டணத்தை செலுத்த முடியாது பங்கெடுக்க இயலவில்லை என்ற வருத்தம் தெரிவித்த நண்பர்களை கணக்கில் கொண்டு, இந்த ஆறு மாத கால பயிற்சிக்கு விருப்பக் கட்டணம் (தாங்கள் விரும்பிய தொகையை) நேரில் செலுத்தி இணைந்து கொள்ளலாம்.

உணவு தங்குமிடம் வழங்கப்படும்.

மாதம் இருமுறை கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பூச்சிகள் நமது நண்பன், நிரந்தர வேளாண்மை, தோட்டக் கலை, கிராமிய பொருளாதாரம், சுவரில்லாக் கல்வி இன்னும் பிற சிறப்பு வகுப்புகள் இருக்கும்.

தமிழகத்தில் உள்ள சிறந்த மாதிரி பண்ணைகளை பார்வையிடல்.

தினசரி பண்ணை வடிவமைத்தல் மற்றும் உணவு உற்பத்திக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.

மாதம் இரண்டு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பயிற்சியில் பனிரெண்டு நபர்கள் மட்டுமே இணைய வாய்ப்புள்ளது.

3 ஆகஸ்ட் 2017 வியாழன் முதல் பயிற்சி தொடங்கவுள்ளது,
ஆகஸ்ட் 4,5,6 நடைபெறவுள்ள மூன்று நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும் .
(வானகத்தில் முன்னரே முன்னரே மூன்று நாள் பயிற்சி பெற்றவர்கள் 4,5,6 பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்றவர்கள் 1800/- செலுத்த வேண்டும்)
மூன்று மற்றும் ஆறு மாத கால பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு 50/- ரூபாய் வழங்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வானகத்தில் தங்கி வானக சூழலை புரிந்து கொண்ட பின்னர் ஆறு அல்லது மூன்று மாத பயிற்சியில் தொடரலாம்.
>>அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்
விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.
தொடர்புக்கு : 9500765537 – 9944236236

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

Anand chellaiah

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி.கே.சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு நாட்களாகவே என் மனத்தில் உருண்டுகொண்டிருந்தது. கடந்த மரபுக்கூடல் அன்று நான் எழுதிய‘கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்’ நூல் வெளியானது. சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு, அதில் கையொப்பமிட்டுத் தரச் சொன்னார்கள். ’தமிழே துணை’ என்று எழுதி கையொப்பமிட்டேன். தமிழின் தயவில் எனக்கும் ஓர் அடையாளம் 🙂

‘ஊடகத்துறை வேலையை நம்பிக்கொண்டு காலம் தள்ள முடியாது, என்றைக்கானாலும் சொந்தத் தொழிலே கைகொடுக்கும்‘ என நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தேன். ஒரு தொழில் என் மனத்தில் தோன்றியது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களிடம் அதை பற்றி ஆர்வத்துடன் உரையாடுவேன். பெரியவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவதுதான் அத்தொழில். எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. ஆனால் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் 🙂 இத்தனைக்கும் தமிழ் அடையாளம், தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளனாக அறியப்படுபவனாகவே அப்போது இருந்தேன். வேறொன்றுமில்லை. சமூகத்தில் எதற்குத் தேவை இருக்கிறதோ, அதன் பின்னால் ஓடும் வழக்கமான வணிகப்பார்வைதான் என்னையும் அப்படி திட்டமிட வைத்தது. நல்ல வேளை, திட்டம் கைகூடவில்லை. 🙂

தமிழில் எனக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. தமிழ் அறிவு குறித்த பெருமிதத்தைக் காட்டிலும், அது என் மனத்துக்கு மிக நெருக்கமான பாடம் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் என் பள்ளி ஆசிரியர் கயத்தாறு மீனாட்சி சுந்தரம். தேர்ச்சியைக் காட்டிலும், அந்த உணர்வே என்னைப் பல இடங்களில் வழிந்டத்தியிருக்கிறது. ஆசிரியர் என்ற வகையில் ஒருவருக்கு இதுவே இன்றியமையாத பணி எனக் கருதுகிறேன்.

முதுகலைக் கல்விக்கான பருவத்தில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியைச் சந்திக்க நேர்ந்தது என் வாழ்வில் முக்கியமானதொரு திருப்புமுனை. பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பின்னால் அலைந்த
மாணவர்களில் நானும் ஒருவன். என்னைப் போன்ற சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று உரையாடுவோம். எங்களுக்கு உணவும் கொடுத்து, தமிழ், இலக்கியம், திரைப்படம், வரலாறு எனப் பல தளங்களைச் சார்ந்த செய்திகளையும் அறிமுகப்படுத்துவார். அப்போது அவர் ஒரு விரிவுரையாளர். பணியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். அக்காலத்தில் தான் பெற்ற குறைவான ஊதியத்தில்தான் இதையெல்லாம் செய்தார் என்பதை மிக மிக தாமதமாகவே அறிந்துகொண்டேன். ‘ப்ளேடு உறை மேல ‘Do not wipe out’ன்னு எழுதிருப்பாங்க. துணியை வச்சு துடைச்சாக் கூட, ப்ளேடோட கூர்மை போய்டும். அதைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தி. அதே மாதிரிதான் மொழியும். சொற்களைக் கவனமா கையாளணும். இல்லைனா மொழியின் கூர்மை போய்டும்’ என்று அவர் சொன்னது என் மனதில் நிலைத்திருக்கும் கூற்றுகளில் ஒன்றாகிவிட்டது.

என் மகளுக்கு ஆதிரா என்று பெயரிட்டேன். ரொம்பவும் மெனக்கெடாமல் தமிழ்ப்பெயர் வைத்துவிட்ட பெருமையில் அலைந்த என்னை சலபதியின் குட்டு தட்டி வைத்தது. ‘ஆதிரை எப்படி இருக்கா…மன்னிக்கணும்…ஆதிரா எப்படிருக்கா?’ என்று விளையாட்டாக மின்னஞ்சலில் நலம் விசாரிப்பார். ‘இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைக் கூர்மையா பார்க்கணுமா என்ன?’ என்று நான் அலுத்துக்கொள்வேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம், ‘ஆதிரா வேறு, ஆதிரை வேறு’ என்று எனக்குப் புரிய வைத்தது.

தமிழ்ச்சான்றோர் பலருண்டு. அதை ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர் யாரேனும் இருக்கிறாரா எனில் நண்பர் செந்தமிழனின் பெயரையே சொல்வேன். வேளாண்மை, மருத்துவம், கட்டுமானம், உறவுகள், குடும்பம் என வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்குமான வழிகாட்டல் தமிழில் இருக்கிறது என்பதை என்னைப் போல பலருக்கு உணர்த்திவருபவர். தமிழை உணர்ந்து பயின்றவர்கள்
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்பவர். அவர் சொல்லவில்லை எனில், இந்நூலை நான் எழுதியிருக்க மாட்டேன்.
நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இது சரியானதொரு நூலாக வருவதற்குத் தனது வழிகாட்டலையும் வழங்கினார். அவருடைய மனைவி காந்திமதி மெய்ப்பு பார்த்ததுடன், உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவர்களுக்கெல்லாம் நான் உளமாரக் கூறும் நன்றிகள் நான் தொடர்ந்து செய்ய விரும்பும் நற்பணிகளாக உருமாறட்டும் என இறையை வேண்டுகிறேன். நூல் கூறும் செய்தியை அட்டை வடிவமைப்பில் ஒரு சின்ன விளையாட்டு மூலம் அழுத்தமாகக் கூறிவிடுவது நண்பன் சந்தோஷ் நாராயணனின் பாணி. அதை ‘கஙசஞ’விலும் நிகழ்த்தியுள்ளான். அவனுக்கு நன்றி சொன்னால், ‘லேசா கண்ணு கலங்குற மாதிரி இருக்குது. அழுறியோ?’ என்றெல்லாம் கேட்டு பீதியைக் கிளப்புவான். 🙂 எதுக்கு வம்பு?

தமிழ் இலக்கணத்தை இறுக்கமற்ற தன்மையில், நட்பார்ந்த தொனியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது. செம்மை மரபுப்பள்ளி மூலமாக அது் செயல்வடிவம் பெற்றது. ‘கஙசஞ’ மூலமாக என் விருப்பம் நூல் வடிவம் பெற்றுள்ளது. என் முதல் நூல் தமிழ் இலக்கணத்தை மக்களிடம் பேசும் ஒரு முயற்சியாக இருக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

செம்மை மரபுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்புதோறும் ஒரு தூய தமிழ்ச் சொல்லை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு விளையாட்டை நடத்துவேன். குறிப்புகளின் துணையுடன் புதையலைக் கண்டுபிடிக்கும் வேலைதான் அந்த விளையாட்டின் வடிவம். மரமும் செடி கொடிகளும் நிறைந்த வளாகத்தில் அங்கங்கே குறிப்புகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பு இன்னொன்றுக்கு வழிகாட்டும். இறுதியில் ஒரு புதையலைப் போல ஒரு நல்ல தமிழ்ச்சொல் காகிதத்தில் எழுதப்பட்டு மண்ணுக்கடியில் காத்திருக்கும். ஆழி, கயல், களிறு போன்ற சொற்கள் புதையல் விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கற்பித்தல் பணி குறித்து நிறைவு எனக்கு இல்லை. இத்தகைய சோர்வில் நான் பேச்சற்று இருந்த ஒரு நாள் அது. மீள்பார்வைப் பயிற்சியாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் புதையல் விளையாட்டு மூலமாக அவர்களுக்கு அறிமுகமான சொற்களை நினைவுகூரச் சொன்னேன். ‘டால்பினுக்குத் தமிழில் என்ன பேருன்னு ஞாபகம் இருக்கா?’ என்ற வினாவுக்கு என் முன்னால் நின்று கொண்டிருந்த மாணவர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எங்களுடன் தொடர்பே இன்றி சிலம்பக் கம்புடன் சுற்றிக்கொண்டிருந்த நித்திக்கிடமிருந்து விடை வந்தது, ‘ஓங்கில்!’

நித்திக் ஒரு ‘பால்கனி’ மாணவன். பெரும்பாலும் வகுப்பில் அமர மாட்டான். அருகில் உள்ள வாகை மரத்தின் கிளை மீது அமர்ந்தபடிதான் பாடத்தைக் கவனிப்பான். கோபத்தை அடக்கிக்கொண்டுதான் அவனிடம் உரையாடுவேன். அவன் இச்செய்திகளை நினைவில் வைத்திருப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஒன்றும் நம் கைகள் வெறுமையாக இல்லை; சில பிஞ்சு மனங்களையாவது உள்ளே கொண்டு வந்திருக்கிறோம் என்ற நிறைவு எனக்கு அன்று ஏற்பட்டது. ‘கஙசஞ’ வழியாக அத்தகைய சிறு மாற்றம் நிகழ்ந்தாலும், மகிழ்ச்சி கொள்வேன்

பீஜாமிர்தம் என்றால் என்ன

பீஜாமிர்தம் என்றால் என்ன?

விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.

Continue reading

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

‘இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை ‘னு கேக்கறீங்களா… காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்…

“இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் ” என்கிறீர்களா…?

சரி…நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
‘அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன …எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ‘ என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

Continue reading

கடுகுப் பயணம்

கடுகுப் பயணம் – மண்டலப் பொறுப்பாளர் அறிவிப்பு
– ம.செந்தமிழன்

நண்பர்களே,
கடுகுப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள். அனைவரையும் முறைப்படி ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்த ஏதுவாக மண்டலவாரி பொறுப்பாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் நேரிடையாக என்னுடன் பணித் தொடர்பில் இருப்பவர்கள். அதேவேளை பயணத்தின் களப் பணியாளர்களையும் வெளியிலிருந்து ஒத்துழைப்புகள், பங்களிப்புகள் நல்குவோரையும் ஒருங்கிணைப்பார்கள்.

பட்டியலில் உள்ள ஊர்களில் உங்களுக்கு வாய்ப்பான பகுதி அடிப்படையில் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

இவர்களைத் தவிர, தமிழகமெங்கும் களப் பொறுப்பாளர்கள் பணியில் இணைக்கப்படுகிறார்கள். அனைவரது பெயர்ப் பட்டியலையும் இணைப்பது தேவையற்றது என்பதால் இம்முறை தவிர்க்கிறேன்.

பயணத்தின் ஊடாக அவர்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அன்புடன்,
ம.செந்தமிழன்

எலுமிச்சை

எலுமிச்சை Lemon

🎾எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து – 50 கிராம்
கொழுப்பு – 1.0 கிராம்
புரதம் – 1.4 கிராம்
மாவுப்பொருள் – 11.0 கிராம்
தாதுப்பொருள் – 0.8 கிராம்
நார்ச்சத்து – 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.
பாஸ்பரஸ் – 0.20 மி.கி.
இரும்புச் சத்து – 0.4 மி.கி.
கரோட்டின் – 12.மி.கி.
தையாமின் – 0.2 மி.கி.
நியாசின் – 0.1 மி.கி.
வைட்டமின் ஏ – 1.8 மி.கி.
வைட்டமின் பி – 1.5 மி.கி.
வைட்டமின் சி – 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் ‘சி’ சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல..