காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார்.
மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர்.
Continue reading →