பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன

கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர்
2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும்.

Continue reading

பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை

பூச்சுவேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை 

நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக “டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄

Continue reading

பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்

கட்டிடக்கலையில் பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன் 

இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ்.

Continue reading

பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை

பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை

இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும்.

Continue reading

விதை வழி செல்க

விதை வழி செல்க

ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது…’

Continue reading