Category: Agriculture News

ஊட்டஉரம்

ஊட்டஉரம் compost

நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம்

வணக்கம்,
1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன்
மீன்அமிலம் – 1லிட்டர்
இஎம் – 500 மில்லி
கோமியம் – 10 லிட்டர்
பயறு மாவு – 2 கிலோ
பழக்கரைசல் – 2 லிட்டர்
வெல்லம் – 2 கிலோ
பஞ்சகவ்யா – 1 லிட்டர்
அசோஸ்பைரில்லம் – 1 கிலோ
சூடோமோனஸ் – 500 கிராம்
கடலைபுண்ணாக்கு -10 கிலோ
புங்கன் புண்ணாக்கு – 10 கிலோ
ஆமணக்கு புண்ணாக்கு – 10 கிலோ.

நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும்.

6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில், வேப்பம் புண்ணாக்கு- 10 கிலோ கலந்து வயலுக்கு தூவி விடவும்.

ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.

 

கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி

கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி

கற்பூரக் கரைசல்: கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி
கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது. இக்கரைசல் பல விவசாயிகளால் உபயோகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

Continue reading

கவனம்கோடையின் தாக்கம் அதிகமிருக்கும்

sun

அன்பு விவசாய சொந்தங்களே

தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு.

எதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம்.

நிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும்.

விவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும்.

பல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும்.

சொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம்.

தெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம்.

தற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது.கவனம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
26.12.2017.

மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்

மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்

இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது.

கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை.
நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன.

Continue reading

அசோலா

அசோலா azola, natural feeds

அசோலா படுக்கை / குட்டை – நேரிடையாக வெயிலில் பட கூடாது.

உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை ..

Continue reading

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு fish farming techniques

மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்

Continue reading

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம் cow_dung

அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம்.

ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம்.

ஒரு வருடத்தில்  3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும்.

சாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தழை  சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால்

உடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

தொழு எரு தயாரித்தல்:

15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை.

இதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம்.

இது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும்.

பிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும்.
6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும்.

100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில்
500 கிராம் தலை சத்து
300 கிராம் மணி சத்து
500 கிராம் சாம்பல் சத்து உள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை.
நல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

உதாரணமாக
சரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை.

அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும்.
பயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்?

அதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள்.

வணக்கதுடன் நன்றி. அசோக்குமார் கார்கூடல்பட்டி